Saturday 5 February 2011

நினைவுகளே கொஞ்சம் நில்லுங்கள் – 6

தலித் இலக்கிய எழுத்தாளர் இதயவேந்தன் , தலித் இலக்கியக் கவிஞர் அன்பாதவன் , இருவரும் இணைந்து , விழுப்புரம் நகரில் 12.10.2008 ல் பெண் படைப்புலகம் - இன்று சமகாலக் கருத்தரங்கத்தை நடத்தினர்.


கவிஞரும் , பேராரசிரியருமான த.பழமலய் , மயிலம் தமிழ்க் கல்லூரி முனைவர் மா.சற்குணம் , பேரா.பிரபா கல்விமணி ( திண்டிவனம் மனித உரிமை இயக்கம் ) எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம் ,பிரபஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் .

பெண் படைப்பாளர்களான முனைவர் பத்மாவதி விவேகானந்தன் ,ப.சிவகாமி இ.ஆ.பெ, முனைவர் அரங்கமல்லிகா ,இரா.தமிழரசி கீதாஞ்சலி பிரியதர்ஷினி, சுதிர்தராணி , திலகபாமா, சு.தமிழ்செல்வி , கவிஞர் மதுமிதா , சக்தி அருளானந்தம் , சக்தி ஜோதி ஆகியோர் கருத்தரங்கில் தங்களின் கருத்துக்களை பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள் .

இக்கருத்தரங்கில் எழுத்தாளர்களான பா.செயப்பிரகாசம் , குரு.ராதாகிருஷ்ணன் ,பிரபஞ்சன் ஆகியோர் சிறப்புப் பொழிவுகளை நிகழ்த்தினர். எழுத்தாளர் பிரபஞ்சன் வாழ்த்துரையும் , சிறப்பு பொழிவையும் நிகழ்த்திய எனக்கு நினைவுப் பரிசை வழங்கும் போது எடுக்கபட்ட ஒளிப்படம் இது .


என் வலைப்பூவில் இரண்டு படங்களை ஆர்வலர்கள் பார்க்க வேண்டியவை எனக் கருதி வைத்துள்ளேன் .

No comments:

Post a Comment