Thursday 3 February 2011

நினைவுகளே கொஞ்சம் நில்லுங்கள் - 1

ஆல் இந்திய ரேடியோ நிலையத்தில் 12.12.1983 அன்று அமர எழுத்தாளர் நா.பார்த்தசாரதியைப் பேட்டி கண்டேன் .

தமிழ்ச் சிறுகதை , புதினங்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் ? என்பதைப் பற்றிய பேட்டி அது . நிலைய நிகழ்ச்சி பொறுப்பாளர் இளசை சுந்தரம் தான் நா.பா.வைப் பேட்டி எடுக்க முடிவாகியிருந்தது .



நான் நா.பா.வுடன் நிலையத்துக்குச் சென்றிருந்தேன் . திடீரென என்னை இப்பேட்டியை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது

நானும் , நிகழ்ச்சிப் பொறுப்பாளரும் பேட்டிக்கான கேள்விகளை தயாரித்தோம் . பின்னர் அரை மணி நேரம் பேட்டி ஒலிப்பதிவாகியது .

அப்போது எடுக்கப்பட்ட இப்படம் இருபத்தி ஏழு வருடங்கள் ஆனாலும் நான் பொக்கிஷமாகக் கருதி பாதுகாத்து வருகிறேன் .

நன்றி : கல்கி இதழ் - 06.02.2011

No comments:

Post a Comment