இன்று
மின்சாரம் தடைப்பட்டதும் ஜெனரேட்டரை இயங்க வைத்து மின்சாரத்தைப் பெறுவது நடைமுறைச்
சாத்தியமாகும்.
அறிவியல்
அறிஞர் மைக்கேல் ஃபாரடே தான் ஜெனரேட்டரைக் கண்டுபிடித்து நமக்கு வழங்கியவர். இவர் இங்கிலாந்தின்
'நியூங்கடன் பட்ஸ்' என்னும் ஊரில் 22-09-1791ல் பிறந்தார். தந்தை பெயர் ஜேம்ஸ் ஃபாரடே.
வறுமையின்
காரணமாக இவரின் அடிப்படைக் கல்வி தடைப்பட்டது. பதின்மூன்று வயதில் புத்தகங்கள் 'பைண்டிங்'
செய்யும் தொழிலை 'ரிக்பான்ஸ்' என்பவரின் புத்தக விற்பனைக் கடையில் செய்து தன் வாழ்க்கையைத்
துவக்கினார்.
பின் அறிவியலாளரான
'சர் ஹம்ப்ரிடேவி' என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் (1812)
மின்சார
மோட்டார்களின் ஆழமான அடிப்படை விதிகளைக் கண்டறிந்தார் (1821). பின் உருவாக்கும் முன்னோடித்
திட்டத்தை தயாரித்தார் ஃபாரடே.
'சாரா
பெர்னார்டு' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார் (1821)
'குளோரி'னை
திரவமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார் (1823)
மின்சாரத்துக்கும் காந்தத்துக்கும் உள்ள ஒத்திசைவுகளைக் கண்டறிந்தார். பின் மின்காந்தத்தின்
தனித்தனி விவரங்களிலிருந்து குறிப்பிட்ட 'எலெக்ட்ரோ மேக்னடிக் இன்டக்ஷனி'ன் அடிப்படைக்
கொள்கைகளை விருத்தி செய்தார்.
'ராயல் இன்ஸ்ட்டிடியூஷன்ஸ லேபாரேட்டிரி'வின் தலைவராக மைக்கேல் ஃபாரடே நியமிக்கப்பட்டார்
(1827)
மின்சார
ஜெனரேட்டரை உருவாக்கினார் (1831). தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து மின்சாரத்துக்கும்
காந்தத்திற்கும் இடையே காணும் ஒற்றுமைகளைக் கண்டறிந்தார். மேலும் மின்சாரத்தை வெவ்வேறாகப்
பிரிக்கும் அடிப்படைக் கொள்கைகளைக் கண்டறிந்தார்.
ராயல்
நிறுவனத்தில் வேதியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் (1833)
'டிரினிட்டி ஹவுஸ்' என்னும் அமைப்பின் நிரந்தர அறிவியல் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்
(1836). இந்த அமைப்பு ஆங்கில அரசின் கலங்கரை விளக்கங்களின் கூட்டுக் குழுவாகும்.
பல்வேறு
நிறுவனங்கள் மற்றும் ராயல் சொசைட்டி வழங்க இருந்த கெளரவப் பட்டங்களைப் பெற மறுத்தார்.
ராயல் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் பதவியையும் துறந்தார்.
ஆனால்
பிரிட்டிஷ் அரசு அளித்த 'நைட் ஹீட்' என்னும் பட்டத்தை மட்டுமே பெற்றுக் கொண்டார்.
நான்காம்
வில்லியம் அரசரிடமிருந்து இவருக்குப் பிரதிவருடம் முந்நூறு பவுன்கள் ஒய்வூதியமாகக்
கிடைத்தது.
அடிப்படைக்
கல்வி ஏதுமின்றி அனுபவங்களின் வாயிலாக உலகம் போற்றும் அறிவியல் மேதையாகப் பரிணமித்தவர்
மைக்கேல் ஃபாரடே.
எழுபத்து
ஆறு வயது வரை வாழ்ந்த இவர் இங்கிலாந்திலுள்ள 'ஹாம்ப்டன் கோர்ட்' என்ற ஊரில்
25-08-1867 அன்று காலமானார்.
குரு ராதாகிருஷ்ணன்