உலகில் சீனர்கள் தற்சார்பு கொண்டவர்கள். ஜப்பானியர்கள் தேசப்பற்று மிக்கவர்கள். தொழிலில் சுறுசுறுப்பும், கவனமும் உடையவர்கள் தென் கொரியர்கள். போட்டி மனப்பான்மையை வளர்ப்பவர்கள் அமெரிக்கர்கள். ஒழுக்கத்தையும், நேரந்தவறாமையையும் ஆங்கிலேயர்களிடம் காணலாம்.
பணிவும், உண்மையாக நடந்து கொள்ளும் மனப்பாங்கினைப் பெற்றவர்கள் இந்தியர்கள்.
மேலை நாட்டில் தனியார் நிறுவனங்களின் கணிப்புகளின் மூலம் கண்டறியப்படவைகள் தான் மேலே கூறப்பட்டுள்ளன.
மற்றவர்கள் பேசுவதை முழுமையாகக் கவனிப்பவர்கள். காது கொடுத்துக் கேட்பவர்கள் நம்மிடையே குறைவு.
இடைமறித்துப் பேசி, கருத்துக்களை கூற வந்தவரை , நிலை தடுமாறச் செய்வதை நம்மில் பலர் வழக்கமாகிக் கொண்டுள்ளோம்.
இந்தச் செய்கை சொல்பவரின் எண்ணங்கள் என்ன என்பது அறியப்படாது போகின்றன.
நல்லவைகளை, நாம் பெறாது போகும் நிலை ஏற்படுகிறது.
மற்றவர்கள் என்ன சொல்ல, நம்மிடம் உரையாட்டுகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.
முழுவைதையும் பேச அவரை அனுமதியுங்கள். அவரைப் பற்றி, அப்போது தான் முடிவுக்கு வர நம்மால் முடியும்.
அவர் சொல்வதை, முழுவதையும் கேட்க வேண்டும். பேச்சு முடியும் வரை அமைதி காக்க வேண்டும். வேறு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும் நிறுத்தி விடுங்கள்.
கேட்கும் பேச்சை உள் வாங்கிக் கொண்டால் தான் பிறரைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
வெளிநாட்டில் வாழுகின்ற தமிழர்களிடையே இவ்வழக்கம் உண்டு என்பதை பயண இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.
கேட்பவருடைய மதிப்பும் உயருகிறது. தம்முடைய எண்ணங்களை முழுமையாகச் சொல்லி முடித்து விட்ட மனத்திருப்தி சொல்பவருக்குக் கிடைக்கிறது.
பேச வந்தவரின் எண்ணங்களைச் சொல்ல அனுமதிப்போம். இடைமறித்துப் பேசுவதை தவிர்ப்போம்.
முடிவுகள் நல்லவிதமாக இருவருக்கும் அமைந்து விடும். சோதித்து தான் பாருங்களேன்.
குரு ராதாகிருஷ்ணன்