-->
குரு ராதாகிருஷ்ணன்
இந்திய
அறிவியல் மேதைகளில் பிரஃபுல் சந்த்ர ரே அவர்களுக்கு முக்கியத் தகுதி அளிக்கப்பட்டுள்ளது.
காரணம், இவர் அறிவியலுடன் சுதேசி இயக்கத்துக்கும் ஆதரவு தந்தவர். ஜெஸஸீர் மாவட்டத்தின்
'ராரூலி' என்னும் ஊரில் 02-08-1861 அன்று பிறந்தவர் இவர். தந்தை பெயர் ஹரிஷ் சந்த்ர
ரே.
அயல் நாட்டின்
கல்வி பெற நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார் (1879)
இங்கிலாந்து சென்று 'ஆல் இண்டியா காம்படிசன் ஃபார் கில்கிறிஸ்ட் ஸ்காலர்ஷிப்' தேர்வில் தேர்ச்சி அடைந்து எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 'இன் - ஆர்கானிக்' பிரிவில் 'டி.எஸ்.ஸி' பட்டம் பெற்றார் (1887).
இங்கிலாந்து சென்று 'ஆல் இண்டியா காம்படிசன் ஃபார் கில்கிறிஸ்ட் ஸ்காலர்ஷிப்' தேர்வில் தேர்ச்சி அடைந்து எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 'இன் - ஆர்கானிக்' பிரிவில் 'டி.எஸ்.ஸி' பட்டம் பெற்றார் (1887).
கல்கத்தாவின்
பிர்சிடென்சி கல்லூரியில் தற்காலிக உதவிப் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இப்பதவியில்
நீடித்துக் கொண்டே தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்து வரலானார் (1889). ஆராய்ச்சி
முடிவுகளின் விவரங்களைக் கொண்ட ' இன்வெஸ்டிகேடிவ் ஒர்க்ஸ் ஆஃப் கெமிக்கல்ஸ்' என்ற
புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
'பெங்கால் கெமிக்கல் அண்ட் பார்மசூட்டிகல் ஒர்க்ஸ்' என்னும் நிறுவனத்தைத் துவக்கினார் (1892).
'பெங்கால் கெமிக்கல் அண்ட் பார்மசூட்டிகல் ஒர்க்ஸ்' என்னும் நிறுவனத்தைத் துவக்கினார் (1892).
பாதரசத்தின்
கூட்டுப் பொருளான ' மெர்க்யூரஸ் நைட்ரைட்' டை முதன்முறையாகத் தயாரித்தார் (1896).
தவிரவும் முக்கியம் வாய்ந்த சில 'நைட்ரைட்'டுகளின் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
இவர் எழுதி
வெளியிட்ட 'ஹிந்து கெமிஸடரி பார்ட்-ஐ' என்னும் புத்தகத்தின் மூலம் பெரும் பெயரையும்
புகழையும் பெற்றார் ரே (1902). இப்புத்தகத்தின் இரண்டாவது பகுதி ஐந்து வருடங்கள் கழித்து
வெளியானது.
அரசுப்
பணியிலிருந்து (பேராசிரியர்) ஒய்வு பெற்ற பின்பு 'யூனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் சயின்ஸ்'
பிரிவில் இயங்கி வந்த ' கெமிக்கல் லாபரேட்டரி'யின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார்
(1916). ' ஆல் இண்டியா சோஷியல் ரீஃபார்ம் கான்பரன்ஸின் தலைவரானார் (1917).
'இண்டியன்
சயின்ஸ காங்கிரஸ்' ன் தலைவராகவும் பணியாற்றிய பெருமை பெற்றார் (1920).
தேசிய
இயக்கம் நாட்டின் விடுதலைக்காக குரல் எழுப்பிக் கொண்டிருந்த வேளையில் பிரஃபுல் சந்த்ர
ரே இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பயணங்கள் மேற்கொண்டார் (1931). பயணங்களின்
போது சுதேசி பற்றிப் பிரச்சாரம் செய்தார்.
இவர் தனது வாழ்க்கை வரலாறு நூல் ஒன்றை எழுதி ' லைஃப் அண்ட் எக்ஸ்பீரியன்ஸஸ் ஆஃப் ஏ பெங்காலி கெமிஸ்ட்' என்னும் தலைப்பில் லண்டனிலிருந்து வெளியிட்டார் (1932).
இவர் தனது வாழ்க்கை வரலாறு நூல் ஒன்றை எழுதி ' லைஃப் அண்ட் எக்ஸ்பீரியன்ஸஸ் ஆஃப் ஏ பெங்காலி கெமிஸ்ட்' என்னும் தலைப்பில் லண்டனிலிருந்து வெளியிட்டார் (1932).
நிறைய
புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது சேவையை ' எம்ரிட்டஸ் பேராசிரியர்' என்ற வகையில் பணி
ஒய்வுக்குப் பின்னும் ' யூனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் சயின்ஸ்' பெற்றுக் கொண்டதாம்
(1936).
பிரிட்டிஷ்
அரசு இவருக்கு சி.ஐ.ஈ என்னும் கெளரவப் பட்டத்தை வழங்கியது (1911).
மேலும்
'நைட்ஹீட்' என்னும் பட்டத்தையும் வழங்கிச் சிறப்புச் செய்தன (1919).
'டர்ஹாம்'
பல்கலைக்கழகம் பி.சி.ரேக்கு டி.எஸ.ஸி. பட்டம் வழங்கியது.
இந்தியாவிலுள்ள அறியலாளர் சிறப்பாகத் தங்கள் பங்களிப்புகளை (அறிவியல் உலகில்) வழங்கியவர்களுக்கு இவர் பெயரில் விருதுகள் கொடுக்கப்படுவது சிறப்புச் செய்தி ஆகும். இவர் திருமணம் செய்து கொள்ளாது பிரம்மச்சரிய வாழ்க்கையை நடத்தியவர்.
எண்பத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்தி வேதியியல் துறையில் வியத்தகு சாதனைகளைப் படைத்த பிரஃபுல் சந்த்ர ரே 19-06-1944 காலமானார்.
இந்தியாவிலுள்ள அறியலாளர் சிறப்பாகத் தங்கள் பங்களிப்புகளை (அறிவியல் உலகில்) வழங்கியவர்களுக்கு இவர் பெயரில் விருதுகள் கொடுக்கப்படுவது சிறப்புச் செய்தி ஆகும். இவர் திருமணம் செய்து கொள்ளாது பிரம்மச்சரிய வாழ்க்கையை நடத்தியவர்.
எண்பத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்தி வேதியியல் துறையில் வியத்தகு சாதனைகளைப் படைத்த பிரஃபுல் சந்த்ர ரே 19-06-1944 காலமானார்.
குரு ராதாகிருஷ்ணன்