Saturday 19 January 2013

14.ஜகதீஷ் சந்த்ர போஸ் ( 1858-1937)



வருமானத்தில் தனது அத்யாவசியத் தேவைக்கு ஐந்தில் ஒரு பங்கை மட்டும் செலவழித்துக் கொண்டு மீதமுள்ள தொகை முழுவதையும் மாணவர்களுக்குச் செலவழித்தவர். அறிவியலைப் பற்றிப் பயிலும் மாணவர்கள் இதனால் பெரும் பயன்களை அடைந்து வந்தனர்.
இவ்விதமான தாராள மனத்தைக் கொண்டவர் அறிவியல் மேதை ஜகதீஷ் சந்த்ர போஸ். இவர் டாக்காவின் அருகிலுள்ள 'ராரிக்ஹல்' என்ற ஊரில் 30-11-1858ல் பிறந்தார். தந்தை பெயர் பகவான் சந்த்ர போஸ். தாயார் பெயர் பாமா சுந்தரி.
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சயின்ஸ 'பி' குரூப்பில் பி.ஏ.பட்டம் பெற்றார் (1879).
லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்றார் (1884).
'அபலாபோஸ்' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார் (1887).
கல்கத்தாவிலுள்ள 'பிரசிடென்சி கல்லூரி'யில் இயற்பியல் பேராசிரியராக கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பணிபுரிந்தவர் ஜகதீஷ் சந்த்ர போஸ்.
'வயர்லஸ் டெலிகிராபி'யின் பயன்பாடுகள் பற்றியும் அதற்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை, பரிசோதனைகள் முடிந்த பின் வெளியிட்டார். இந்த ஆராய்ச்சியின் மூலம் ஜகதீஷ் சந்த்ரர் பெரும் புகழையும்,நாட்டினரின் கவனத்தையும் பெற்றார் (1895).
பாரீஸ் நகரில் 'இன்டர்நேஷனல் காங்கிரஸ் ஆஃப் பிசிக்ஸ்' நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கு கொண்டார் (1900).
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் 'எமரிடஸ் புரொபசர்' ஆனார் (1915).
பிரான்ஸில் இயங்கி வந்த 'பிசிக்ஸ் ஸயின்ஸ் சொசைட்டி ஆஃப் பிரான்ஸ்' என்ற அமைப்பின் அங்கத்தினர் ஆனார்.
கல்கத்தா நகரில் 'போஸ் ரீசர்ச் இன்ஸ்டிடியூட்' என்னும் பெயரில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை ஜகதீஷ் சந்த்ர போஸ் நிறுவினார். இதன் இயக்குனராகத் தொடர்ந்து இருபது ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார் (1917-1937).
பல்வகையான இயந்திர சாதனங்களை தாவர இயல் பற்றி படிப்பவர்களுக்குத் தன் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்து வழங்கினார்.
'ரிசோனட் ரிக்கார்டர்', 'ஆஸிலேட்டிங் ரிக்கார்டர்', 'போட்டோஸின்தடிக் ரிக்கார்டர்' என்னும் சாதனங்கள் இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை ஆகும்.
'டையாமெட்ரிக் கன்ஸ்டரக்ஷன் அபாரெடஸ் அண்ட் கிரஸ்கோகிராப்' என்னும் இயந்திரங்கள் அதிமுக்கியமானவை (1927).
தாவரங்கள் சம்பந்தமாக நிறைய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
'தி பிஸியாலஜி ஆஃப் போட்டோ சிந்தஸிஸ்', 'பிளான்ட் ரெஸ்பான்சஸ் அண்ட் தி நெர்வஸ் மெக்கானிஸம் ஆஃப் பிளான்ட்ஸ்' என்னும் இரு நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இவர் மரணத்துக்குப் பின் பதினேழு லட்சம் ரூபாய்களை இந்திய நாட்டின் அபிவிருத்திக்கென உயிலின் மூலம் விட்டுச் சென்றுள்ளார். இந்த நிகழ்வு இவரது நாட்டுப் பற்றையும், விசால எண்ணங்களையும் அறிவிக்கிறது. லண்டன் பல்கலைக்கழகம், 'டி.எஸ்.ஸி' பட்டம் வழங்கிக் கெளரவித்தது (1896).
'கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்ப்பையர்' என்னும் கெளரவப் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது (1911).
லண்டனின் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் கிடைத்தது (1920)
பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஜகதீஷ் சந்த்ரருக்கு கெளரவ 'டாக்டரேட்' பட்டங்களை வழங்கியுள்ளன.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு 'நைட்ஹீட்' பட்டமும் வழங்கியுள்ளது.
பலனை எதிர்பாராது மானவர்களுக்கும், நாட்டுக்கும் பல நன்மைகளைச் செய்தவர் டாக்டர் ஜகதீஷ் சந்த்ர போஸ்.
பீஹாரிலுள்ள 'கிரிடிஹ்' என்னும் ஊரில் 23-11-1937 அன்று தன் எழுபத்து ஒன்பதாம் வயதில் இயற்கை எய்தினார் இப்பெருந்தையாளர்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment