பதினெட்டாம்
நூற்றாண்டில் பெருவாரியான மக்கள் அதிக அளவில் மலேரியா சுரத்தினால் மரணமடைந்தனர்.
மலேரியா
சுரம் வருவதற்கான காரணங்கள், இதை முற்றிலுமாக வராது தடுப்பதற்கானவைகளைத் தன் ஆராய்ச்சிகளின்
மூலமாகக் கண்டறிந்தவர் ரொனால்டு ராஸ் என்னும் மருத்துவர் ஆவார்.
இவர் உத்தரப்பிரதேசத்தின்
அல்மோரா நகரில் மலில்டா சார்லெட் எல்டர்சன், காம்ப்பெல் க்ளேஸ் கிராண்ட் ராஸ் தம்பதியருக்கு
13-5-1857ல் பிறந்தவர்.
லண்டனுக்குச்
சென்று மருந்தியலில் பட்டம் பெற்றார் (1879). 'டிராபிகல் மெடிசன்' பிரிவில் பட்டம்
பெற்று இந்தியா திரும்பினார் (1881). இப்பிரிவு குறுகிய காலப் பயிற்சியாகும்.
மீண்டும்
லண்டனுக்குச் சென்று 'பாக்டீரியாலஜி' பிரிவில் படித்தார். அத்துடன் 'பொது சுகாதாரம்'
பற்றிய டிப்ளமோ ஒன்றையும் பெற்று வந்தார் (1888).
மருந்தியல்
பட்டம் பெற்றதும், இந்திய மருத்துவத்துறையில் சேர்ந்தார் ராஸ் (1881).
சென்னையிலுள்ள
'ஸ்டேஷன் ஹாஸ்பிட்டலில்' மருத்துவராக நியமிக்கப்பட்டார். சென்னையிலிருந்து பங்களூருக்கு
மாற்றம் செய்யப்பட்டார் (1884).
பின் அந்தமான்
தீவுகளுக்கு மாற்றப்பட்டார் (1885) ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் பங்களூருக்கு மாற்றம்
செய்யப்பட்டார் (1890).
பங்களூரிலிருந்து
தான் இரண்டு வருடங்களுக்குப் பின் மலேரியாவைப் பற்றிய தன் ஆராய்ச்சிகளைச் செய்ய ஆரம்பித்தார்
(1892).
லண்டனில்
'டிராபிகல்' நோய்களின் சிறப்பு நிபுணரான 'சர் பாட்ரிக் மேன்சன்' என்பவரைச் சந்தித்து
சில ஆலோசனைப் பெற விரும்பினார் ராஸ். அதன்படியே லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
இச்சந்திப்புக்குப்பிறகு
தான் ஒரு வகை கொசுக்களின் மூலமாகத் தான் மலேரியா பரவுகிறது என்பதை உறுதி செய்தார்
(1898).
இத்துறையில்
ஆழமாகப் படித்து மேலும் அறிவைப் பெற மீண்டும் லண்டனுக்குச் சென்றார் . அங்குள்ள 'லிவர்பூல்
ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசன்' என்னும் பள்ளியில் முதலில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
பின் 'லிவர்பூல்' பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் (1899). இவர் 'ரோஸா ப்ளாக்ஸம்' என்னும்
மங்கையைத் திருமணம்செய்து கொண்டார் (1889).
கவிதைகள்,
கதைகள்,கணிதம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர் ரொனால்டு ராஸ்.
இவர்
'பிரிவென்ஷன் ஆஃப் மலேரியா' என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார் (1910). பிரசித்தி
பெற்ற நூல் இது.
லண்டனிலுள்ள
'கிங்ஸ் காலேஜ் ஹாஸபிட்டல்'ல் டாக்டராக நியமனம் செய்யப்பட்டார். பின் 'தி ராஸ் இன்ஸடிடியூட்
அண்ட் ஹாஸபிட்டல் ஃபார் டிராபிகல் டிஸீஸஸ' என்னும் மருத்துவ நிலையத்தின் இயக்குநர்
ஆனார் (1912). இவரது திறமைக்கென்று கெளரவிக்கும் வகையில் மேலே குறிப்பிட்ட இன்ஸடிடியூட்
அமைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் போர்ப்படையின் மலேரியா கட்டுப்பாடு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் .
பிரிட்டிஷ் போர்ப்படையின் மலேரியா கட்டுப்பாடு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் .
'டையக்னாஸ்டிக்
மைக்ரோஸகோப்'பைக் கண்டுபிடித்தவர் ராஸ்.
ரொனால்டு
ராஸ் மருத்துவரானாலும் நிறைய நாவல்களையும், கவிதை நாடகங்களையும் எழுதியுள்ளார். 'தி
ஸ்பிரிட் ஆஃப் ஸ்ட்ராம்', 'ரிபெல்ஸ் ஆஃப் ஆர்செரா', 'தி எமிக்ரண்டஸ்' ஆகியவை நாவல்கள்
வரிசையிலும் ' எட்கர்', 'தி நியூ பிக்மேஷன்', 'தி ஜட்ஜ்மென்ட் ஆஃப் டித்தோனஸ்' என்பவை
கவிதை நாடகங்கள் ஆகும். தரமான இலக்கியப் படைப்பாளியாகக் கருதப்படுபவர் ராஸ்.
ராஸ்,
தன் வாழ்வின் இறுதிவரை மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்கப் பாடுபட்ட மருத்துவர், மிகுதியான
அளவில் மலேரியாவினால் மக்களின் இறப்புகளைத் தடுத்து நிறுத்திய தனியாள் மற்றும் பொறுப்பு
மிகுந்த மருத்துவர் என்ற பெருமை இவரையே சாரும்.
லண்டனிலுள்ள
'ராயல் சொசைட்டி' ஃபெல்லோஷிப் கிடைத்தது (1901).
உலக அளவில்
புகழ்பெற்ற விருதான நோபல் பரிசு உடலியல் மற்றும் மருத்துவம் பிரிவுக்கும், மலேரியாவைப்
பற்றிய ஆராய்ச்சிகளுக்கென்றும் , இவருக்கு வழங்கப்பட்டது (1902).
பிரிட்டிஷ்
அரசு இவருக்கு 'சர்' பட்டம் வழங்கிக் கெளரவித்தது (1911).
பொது
சுகாதாரப் பிரிவில் மலேரியா பற்றிய இவரது ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டமைக்கு ' டிரையென்னியல்
பார்க்ஸ் மெமோரியல் பிரைஸ்' இவருக்கு வழங்கப்பட்டது. தவிரவும் இவரை முப்பதுக்கும்
மேற்பட்ட அறிவியல் மற்றும் மருத்துவ அமைப்புகள் தங்களின் கெளரவ அங்கத்தினராகப் பதிவு
செய்து கொண்டனவாம்.
லண்டன் நகரில் 16-9-1932 அன்று ரொனால்டு ராஸ் தனது எழுபத்து ஐந்தாம் வயதில் காலமானார்.
லண்டன் நகரில் 16-9-1932 அன்று ரொனால்டு ராஸ் தனது எழுபத்து ஐந்தாம் வயதில் காலமானார்.
மலேரியா
சுரத்தை ஒழித்த பெருமைக்கு உரியவர் என்று உலகெங்கிலும் பேசப்பட்டவர் இவர்.
குரு ராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment