அலெக்ஸாண்டர்
கிரஹாம்பெல்லும், தாமஸ் ஆல்வா எடிசனும் சம காலத்து அறிவியலார்கள். இருவருமே தங்களது
கண்டுபிடிப்புகளின் மூலம் உலகின் பல அறிஞர் பெருமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்கள்.
கிரஹாம்பெல்லி
ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் ' அலெக்ஸாண்டர் மெல் வில்லிபெல்', 'எலிசா கிரேஸ் ஸைமண்ட்ஸ்'
தம்பதியருக்கு 3.3.1847ல் பிறந்தவர்.
எடின்பரோவிலுள்ள
'ராயல் ஸ்கூலில்' பதினான்காம் வயது வரை படித்துத் தேர்ச்சி பெற்றார். பின்பு தானாகவே
படித்து கல்வியைப் பெற்றார்.
பாஸ்டனில்
'சென்டர் ஆஃப் கல்ச்சர்' என்ற அமைப்பு இயங்கி வந்தது. சிறந்த பேச்சாளரான அலெக்ஸாண்டர்
கிரஹாம்பெல் இவ்வமைப்பின் வேண்டுகோளை ஏற்று, அங்கு சென்று தன் பொழிகளை நிகழ்த்தினார்
(1871)
காது கேளாதோருக்கென்று
பயிற்சிகளைத் தர வேண்டி பாஸ்டனில் ஒரு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைத் துவக்கினார்
(1872). 'லோகல் பிஸியாலஜி' பேராசிரியராக பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நியமனம் செய்யப்பட்டார்
பெல் (1873).
கிரஹாம்பெல்
தொலைபேசியைக் கண்டுபிடித்தார் (1876). தன் நண்பரான தாமஸ் வாட்ஸன் என்பவருக்குத் தொலைபேசியின்
மூலம் 'இங்கே வா' என அழைப்பு விடுத்தார். இதுவே பெல்லின் முதல் தொலைபேசி உரையாடல்
என்று கூறப்படுகிறது.
'மேபெல்
ஹப்பார்டு' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார் (1877).
'போட்டோ
போன்' சாதனத்தைக் கண்டுபிடித்தார் (1880).
'கிராமபோன்'
என்னும் இசை பரப்பு சாதனத்தைக் கண்டுபிடித்தார் (1887).
தாமஸ்
ஆல்வா எடிசனின் 'போனோகிராப்பில்' சில அபிவிருத்திகளைச் செய்து முடித்தார் கிரஹாம்பெல்.
'நேஷனல்
ஜியோகிராபிக் சொஸைட்டி'யின் தலைவராக சிறிது காலம் பணியாற்றியவர் பெல் ( 1898).
தாப் கண்டுபிடித்தவைகளில்
பதினெட்டு வகை அறிவியல் சாதனங்களை மட்டுமே தனது பெயரில் காப்புரிமை பதிவுகளைச் செய்தார்.
இதர பன்னிரெண்டு வகைகளை மற்றவர்களின் பெயர்களில் காப்புரிமை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
பன்னிரெண்டு கண்டுபிடிப்புகளைச் செய்ய நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால், பணம் கொடுத்து உதவியவர்களின் பெயரில் காப்புரிமைகளைப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் பெல்லுக்கு ஏற்பட்டனவாம்.
பன்னிரெண்டு கண்டுபிடிப்புகளைச் செய்ய நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால், பணம் கொடுத்து உதவியவர்களின் பெயரில் காப்புரிமைகளைப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் பெல்லுக்கு ஏற்பட்டனவாம்.
கிரஹாம்பெல்
நேரடியாகவே காது கேளாதவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தினார். நிறைய மாணவர்கள் பயிற்சி
பெற்று வந்தனர். அத்தகைய மாணவர்களில் ஒருவர் தான் ' ஹெலன் கெல்லர்'.
ஃபிரெஞ்ச்
அரசின் சிறப்பு விருதான 'வோல்டா அவார்டு' பெல்லுக்கு வழங்கிச் சிறப்பித்தது
(1880).
ஆக்ஸ்ஃபோர்டு,
ஹாவேர்டு மற்றும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கெளரவப்பட்டங்களைக் கொடுத்து கெளரவித்துள்ளன.
காது கேளாதோர்
நல வாழ்வுக்க்கென்று அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் நினைவாக 'அமெரிக்கன் அசோஷியேஷன்' என்ற
அமைப்பு நடைபெற்று வருகின்றது. 1956 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பெல் வாழ்ந்த
காலத்தில் இந்த நலவாழ்வு அமைப்பை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி ஆகும்.
கனடாவிலுள்ள
கேப் பிரிட்டன் ஐலண்ட்ஸைச் சேர்ந்த நோவா ஸகோஷியா என்ற ஊரில் 2-8-1922 அன்று காலமானார்.
எழுபத்து ஐந்து வருடங்கள் வாழ்ந்தவர், கிரஹாம்பெல்.
குரு ராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment