Thursday 27 December 2012

11. தாமஸ் ஆல்வா எடிசன் (1847-1931)



மனித சமுதாயத்துக்குத் தன் கண்டுபிடிப்புக்களைப் பரவலாக வழங்கிப் பெயர் பெற்றது அறிவியலார் தாமஸ் ஆல்வா எடிசன் என்பவரின் சாதனைகள் தான் என்பது நிதர்சனம்.

தனது ஆராய்ச்சிகளின் மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைத் தன் பெயரில் பதிவு செய்து கொண்டார் இவர்.

அமெரிக்க நாட்டின் ஒஹியோ மாநிலத்தின் மிலான் நகரில் 11-02-1847ல் 'நான்சி எலியட் எடிசன்', 'சாமுவேல் ஒடன் எடிசன்' தம்பதியருக்குப் பிறந்தவர்.

இவருக்கு ஆரம்பக் கல்வி கிடைக்கவில்லை. ஆனாலும் போதிய கல்வியறிவைப் பெறவேண்டுமென்ற தன் முனைப்பும், உந்துதல்களும் இவருள் ஏற்பட்டன.

இருமுறை திருமணம் செய்து கொண்டவர் எடிசன். முதல் மனைவியின் பெயர் 'மேரிஸ்டில் வெல்' (1871). முதல் மனைவி மரணமடைய 'மினா மில்லர்' என்னும் மங்கையை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார் (1886).

ரயில் நிலையத்துல் செய்தித்தாள்கள் மற்றும் காய்கறி,கனி முதலியவைகளை விற்பனை செய்ய ஆரம்பித்தார் (1859). இவரது வாழ்க்கையின் முதல் பணி இதுவே.

'தி வீக்லி ஹெரால்டு' என்னும் செய்தித்தாளை சொந்தமாக ஆரம்பித்து நடத்தினார். இதன் ஆசிரியர், பதிப்பாளர், விற்பனையாளர் எல்லாமே எடிசன் தான் . இந்த நிகழ்வு இவரது பதினைந்தாம் வயதில் நடந்தேறியது.

இதன் பின்னர் அறிவியல் ஆராய்ச்சிகளில் இவரது கவனம் திரும்பியது.

எலக்ட்ரிக் வோட் ரிக்க்கார்டர், போனோகிராப், மல்டிபிளக்ஸ் டெலிகிராப் ஸிஸ்டம். எலக்ட்ரிக் பென், வாக்ஸ் பேப்பர், அக்குமுலேட்டர், ஆடியோபோன், எலக்ட்ரிக் பல்ப், ரேடியோ வால்வ், மெகா போன், கினெட்டோ போன், டெசிமீட்டர், எலக்ட்ரிக் ரயில்வே முதலியன எடிசனின் கண்டுபிடிப்புகளில் சில.

'தேவல் அட்வைசரி கமிட்டி ஆஃப் யு.எஸ்.'யின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தான் முதல் உலக மகாயுத்தம் நடந்தது. இப்போரில் பயன்படுத்துகின்ற வகையில் நாற்பதுக்கும் மேற்பட்ட ராணுவ சாதனங்கள், ஆயுதங்களையும் கண்டுபிடித்து அமெரிக்க அரசுக்கு வழங்கினார்.

துணி மற்றும் ரப்பர் பட்டைகளால் மூடப்பட்ட ' அண்டர் கிரவுண்ட் எலட்ரிக் கேபிள்'களைக் கண்டுபிடித்தார் எடிசன்.

இவரது பிரசித்தி பெற்ற கண்டுபிடிப்புகலைக் கெளரவிக்கும் முறையில் 'பனாமா பசிபிக் எக்ஸிபிஷனில்' 21-10-1915 அன்று ' எடிசன் நாள்' கொண்டாடப்பட்டது.

எண்ணற்ற தொழில் நிறுவனங்கள், கல்விச்சாலைகள் இவருக்கு நிறைய விருதுகளை வழங்கின.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் 'ப்ரைஸ்லெஸ் ஜெம் ஆஃப் யு.எஸ்.' என்ற கெளரவப்பட்டத்தை எடிசனுக்கு வழங்கிப் பெருமைப்படுத்தினார். இத்தாலிய இளவரசர் 'கவுண்ட்' என்னும் பட்ட்டத்தை வழங்கிச் சிற்ப்பித்தார்.

'நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸ்' என்னும் அமைப்பு எடிசனை அங்கத்தினராக்கிக் கெளரவித்தது. (1927).

நியூ ஜெர்ஸி மாநிலத்திலுள்ள 'வெஸ்ட் ஆரஞ்ச்' என்ற ஊரில் 18-10-1931 அன்று மரணம் அடைந்தார். மரணத்தின் போது இவரது வயது எண்பத்து நான்கு.

இறவாப் புகழ் படைத்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment