Wednesday 19 December 2012

10. ஆல்ஃபிரட் பெர்ணார்டு நோபல் ( 1833-1896)


வெடிமருந்து ஜெலட்டின் குச்சிகள்,குண்டுகள் என்பவை இன்றைய உலகில் எல்லோராலும் கேள்விப்படவும், பேசப்படவும் கூடிய சாதாரணப் பொருட்கள் ஆகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் தன் இவைகள் உலகுக்கு அறிமுகமாயின. கண்டிபிடிப்பாளர், அறிவியலார் ஆல்ஃபிரட் பெர்ணார்டு நோபல் என்பவர்.

ஸ்வீடன் தேசத்து ஸ்டாக்ஹோம் நகரில் கரோலின், இம்மானுவேல் நோபல் தம்பதியருக்கு 21-10-1833ல் பிறந்தவர் இவர்.

இவர் ரஷியன், ஆங்கிலம், சுவீடிஷ், ஃபிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மொழிகளை வீட்டில் ஆசிரியரின் உதவியால் கற்றுக் கொண்டார்.

பாரீஸ நகருக்குச் சென்று ஒருவருடம் மட்டுமே வேதியியல் பாடம் கற்றார்.

நோபலின் தந்தை இம்மானுவேல் நோபல் தேர்ந்த ஆராய்ச்சியாளர். நைட்ரோகிளிசரினை ஆய்வகத்தில் சோதனை செய்தார் தந்தை. அவருக்கு ஆய்வின் போது உதவினார் ஆல்ஃபிரட் நோபல்.

டைனமைட் மற்றும் நோபல்ஸ் சேஃப்டி பவுடர் இரண்டையும் கண்டுபிடித்தார்.

நைட்ரோகிளிசரினுக்குக் காப்புரிமை பெற்று ஐரோப்பாவில் பல தொழிற்சாலைகளை நிறுவினார் (1863)

பயங்கரமான வெடிப்பொருளான 'பிளாஸ்டிங் ஜெலட்டின்' இவரால் கண்டுபிடிக்கப்பட்டது (1876)

சிறிய அளவிலான ஆயுதங்களுக்குத் தேவைப்படும் புகை வெளியிடாத 'பாலிஸ்டைட்' வகை 'கன்'பவுடரைக் கண்டுபிடித்தார்

ஆல்ஃபிரட் நோபலின் கண்டுபிடிப்பான ' டைனமைட் பவுடர்' உற்பத்தி அவருக்கு அளவற்ற செல்வத்தை ஈட்டித் தந்தது. உலகின் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக உயர்ந்தார். வெடிமருந்துத்தூள் இவரை கோடீஸ்வரராக ஆக்கியது.

இவருக்கு நாயின் மீது அளவற்ற பாசமும், அன்பும் உண்டு.

தான் ஈட்டிய செல்வத்தின் பகுதியாக கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் டாலர்களை அன்பளிப்பாகத் தன் பெயரரிலான அறக்கட்டளைக்கு வழங்கினார். இதன் மூலம் கிடைக்கின்ற வருவாயை உலகில் தலைசிறந்த கண்டுபிடிப்புகளை அறிவிப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் வேதியியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம் , சமாதானம் ஆகிய துறைகளில் சிறப்பான சேவைகளையும், கண்டுபிடிப்புகளையும் செய்து காட்டிய அறிவியலார், அறிஞர்கள், படைப்பாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் ஆல்ஃபிரட் பெர்ணார்டு நோபல் மரணத்துக்கு முன் எழுதிவைத்த உயிலின் நிபந்தனைகள்.

நோபல் பரிசைப் பெறுபவர்கள் உலகின் சிறந்த மனிதர்களாகப் போற்றப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே. சிறப்புக் குழுவினர்கள் இப்பரிசுக்கானவர்களைத் தேர்ந்தெடுத்து முடிவினைத் தெரிவிக்கின்றனர். உலகெங்கிலும் இப்பரிசுக்கு அதிக மவுசு.

நோபல் தான் வாழும் காலத்திலேயே அதிகமான விருதுகளைப் பெற்றவர் என்பது சிறப்புச் செய்தி.

சுவீடிஷ் நார்த் ஸ்டார்; சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் தங்கப்பதக்கம்; ஃபிரஞ்ச் ஆர்டர்; பிரேஸிலியன் ஆர்டர் ஆஃப் தி ரோஸ் ; ஆர்டர் ஆஃப் பெலிவர் ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

தொலைநோக்குச் சிந்தனையும், விசால மனதும் கொண்ட ஆல்ஃபிரட் பெர்ணார்டு நோபல் இத்தாலியின் 'சான்ரீமோ' நகரில் 10-12-1896 அன்று அறுபத்து மூன்றாம் வயதில் காலமானார். இவர் மரணத்துக்குப் பின்னும் எல்லோரது மனங்களிலும் நீக்கமற நிறந்து இருக்கிறார்.


குரு ராதாகிருஷ்ணன்


No comments:

Post a Comment