Saturday 8 December 2012

8. சார்லஸ் ராபர்ட் டார்வின் ( 1809-1882)


விலங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்றும், மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி அடிப்படைக் கொள்கைகளை ஆராய்ந்து பார்த்துப் பின் தனது கருத்துக்களைச் சொன்னவர் சார்லஸ் ராபர்ட் டார்வின். சொன்னது மட்டுமின்றி தம் கருத்துக்களை எழுதி புத்தகங்களில் பதிவு செய்து உலகுக்கு வழங்கினார்.

இவருக்கு இயற்கை அறிவியலில் மிகுந்த ஈடுபாடுகள் உண்டு. இவர் இங்கிலாந்தின் 'ஷ்ரூஸ்பரி' என்ற ஊரில் 'சூசன்னா', 'ராபர்ட் வாரிங் டார்வின்' தம்பதியருக்கு மகனாக 12-02-1809ல் பிறந்தார். டார்வினை டாக்டர் ஆக்க வேண்டும். பின் கிருத்தவ மதகுருவாகிப் பார்க்க வேண்டும் என்பது தந்தையின் விருப்பங்கள். ஆனால் டார்வினின் நோக்கங்களும், லட்சியங்களும் வேறு விதங்களில் அமைந்து விட்டன.

'கேம்பிரிடஜ்' பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் இவர் (1831). 'எம்மா வெட்ஜ்வுட்' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார் (1839). டார்வின் தம்பதியருக்கு மூன்று மகன்கள் பிறந்தனர்.

முதல்முதலாக டார்வின் ஐந்து ஆண்டுக்காலம் நெடுந்தூர கடல் பயணத்தை மேற்கொண்டார் (1831-36). பயண முடிவில் 'பீக்ளே' என்னுமிடத்தில் கரை சேர்ந்தார்.

'ஜியோலாஜிக்கல் சொசைட்டியின்' செயலாளராகப் பணியாற்றினார் டார்வின் (1838). தான் மேற்கொண்ட கடல் பயணத்தின் அனுபவங்களையும், நிகழ்வுகளையும் எழுதி நூலாக வெளியிட்டார் (1839)

'தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீலீஸ் பைமீன்ஸ் ஆஃப் நேச்சுரல் செலக்ஷன்' என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார் டார்வின். ஆயிரத்து இருநூற்று ஐம்பது புத்தகங்கள் அச்சாக்கப்பட்டு முதல் பதிப்பாக வெளியாயின. விற்பனைக்கு வந்த நாளிலேயே எல்லாப் பிரதிகளுமே விற்றுத் தீர்ந்தன என்பது சிறப்புச் செய்தி.

'தி ஸ்டரக்ச்சர் அண்ட் டிஸ்ரிபியூஷன் ஆஃப் கோரல் ரிஃப்ஸ்', 'ஜியோலாஜிக்கல் அப்சர்வேஷன் ஆன் வால்கனிக் ஐலண்ட்ஸ்', 'தி வேரியேசன் ஆஃப் அனிமல்ஸ் அண்ட் பிளான்ட்ஸ் அண்டர் டொடி ஸ்டிகேஷன்', 'தி எக்ஸ்பிரஷன் ஆஃப் தி எமோஷன் இன் மேன் அண்ட் அனிமல்ஸ்' ஆகிய டார்வினின் நூல்கள் சிறந்ததாகவும், பிரசித்தி பெற்றும் விளங்கின.
உலகப் பிரசித்தி பெற்றது புகழ் வாய்ந்த நூலான ' தி டிஸன்ட் ஆஃப் மேன்' என்னும் நூலை இறுதியில் எழுதி வெளியிட்டார் (1871)

டார்வினின் மூன்று மகன்களும் படித்துப் பட்டங்கள் பெற்றதும் லண்டன் 'ராயல் சொஸைட்டி'யில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பத்து ஆண்டுகால இடைவெளியில் சார்லஸ் ராபர்ட் டார்வினுக்கு நிறையப் பட்டங்களும், பரிசுகளும் கிடைத்தன (1870-1880)

இங்கிலாந்தின் 'கேம்பிரிட்ஜ்' பல்கலைக்கழகம் இவருக்கு ' டாக்டர் ஆஃப் லாஸ்' என்னும் கெளரவப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது (1877)

'டியூரின்' ராயல் அகாதமி என்ற அமைப்பு 'பிரெஸ்ஸா' பரிசு வழ்ங்கியது.

'ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ்' 'சால்; 'பேலி' பதக்கம் வழங்கப் பெற்றார்.

டார்வின் எழுதி வெளியிட்ட நூல்கள் அனைத்தும் இயற்கை அறிவியல் வல்லுநர்களுக்கும், மருத்துவர்களுக்கும் முன்னோடி விளக்கங்களை வழங்குகின்றன என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவுகளாகும்.

உலகுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து, பலரது பாராட்டுதல்களைப் பெற்ற இவர் இங்கிலாந்திலுள்ள 'டெளனே' என்னும் ஊரின் 19-04-1882ல் இயற்கை எய்தினார். எழுபத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்.

பிரபஞ்சத்தின் இறுதி மனிதன் வரை இவர் கருத்துக்களை நினைக்கத் தோன்றும் என்பது உண்மையான செய்தியாகும்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment