குழந்தைகளுக்கு பொய், புரட்டுகள் தெரியாது. அவைகளைக் கற்பிப்பது பெரியவர்களே.
கேட்பதை எல்லாம் வாங்கித் தர நம்மிடம் பணம் கிடையாது. எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று தகப்பனார் நினைக்கிறார்.
அவர் சொல்வது நிஜம் என்று நம்புகிறது. நிறையப் பொய்களைக் கேட்டு இறுதியில் ஏம்பா ! பொய் சொல்ற ! என்று அவரையே திரும்பிக் கேட்கும்.
கேட்கும் பொருளை முடிந்தால் வாங்கித் தாருங்கள்.
இல்லையெனில் நாளைக்கு வாங்கித் தருகிறேன் என்று சொல்ல வேண்டாம்.
பிஞ்சு மனங்களில் எதிர்பார்ப்புகளை வளர்க்க வேண்டாம்.
நன்றாகப் படித்து, நிறைய மதிப்பெண்களை எடு. மேல் வகுப்புக்குச் செல்லும் போது விரும்பியதை வாங்கித் தருகிறேன் என்று சொல்லிப் பாருங்கள்.
இதனால் நமக்குக் கிடைக்கும் கால அவகாசம், பணம் சேகரிக்க உதவும்.
குழந்தைகளின் கவனம் படிப்பில் திரும்பி விடும்.
பிஞ்சு மனங்களில் ஊன்றப்படும் விதைகள் தான் பின்னாளில் விருட்சமாக வளரும் என்ற சிந்தனை வேண்டும்.
பள்ளிக்குப் போனால் உனக்கு பைவ் ஸ்டார் வாங்கித் தருவேன் என்பதும்;
மேசை மீது வைக்கப்பட்ட கண் கண்ணாடியை எடுத்துவா காசு தருகிறேன் என்பதும்;
கடைக்குப் போய் இதை வாங்கி வா - இந்தா பத்து காசு என தருவதும் நல்லதல்ல.
குழந்தைகள் பெரியவர்களானதும் பணம் வாங்கிக் கொண்டு தான் எதையும் செய்ய வேண்டுமென்ற மனவோட்டம் நிறைந்திருக்கும்.
நண்பர் வீட்டுக்குப் போகும் போது வாங்கிச் செல்லும் பண்டங்களை, பெரியவர்களின் உத்தரவு நோக்கிப் பெறுகின்ற குழந்தைகளும் இருக்கின்றனர். வளர்ப்பு அப்படி.
இயன்றவற்றை முடியும் என்றும், இயலாததை முடியாது என்றும் தீர்மானித்து பக்குவமாக கூறுங்கள்.
குழந்தைகளின் மனங்கள் பவித்ரமானவை. அவைகளைப் பொன்போல் பாதுகாத்துப் போற்றினால் புகழ்மிக்க சான்றோர்களாக மிளிரக் கூடும்.
இன்றைய குழந்தைகள் நாளைய நல்ல குடிமக்களாகின்றனர். நாடு வளம் பெற நல்ல குடிமக்கள் அவசியம் தேவை.
குரு ராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment