Thursday 3 February 2011

நினைவுகளே கொஞ்சம் நில்லுங்கள் - 3

பண்ருட்டி வட்டம் மேல்பட்டாம்பாக்கம் எனும் ஊரில் கிருஷி அறக்கட்டளை இயங்கி வருகிறது . திரு.திரிசங்கு என்பவர் நிறுவனராக இருந்து நடத்தி வருகிறார்.இந்த அறக்கட்டளையின் நோக்கங்களை இங்கு குறிப்பிடல் வேண்டும் .

பள்ளி , மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் , நோட்டுகள் , வழிகாட்டி நூல்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்படுகின்றன . படித்து முடித்த அல்லது வீட்டுத்தலைவிகளுக்கு தையல் பயிற்சியும் தரப்படுகிறது . படிப்பைத் தொடர இயலாத மாணவிகளுக்கு தட்டெழுத்துப் பயிற்சி நிலையங்களில் சேர நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன .



மேலும் நிழலச்சு ( xerox ) இயந்திரங்களை கையாள்வதும் , பராமரித்தலும் பற்றிய பயிற்சிக்கு வேலையற்ற இருபாலருக்கும் சேரும் முயற்சிகள் எடுக்கபட்டு வருகின்றன .நிதி உதவிக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன .

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ' தமிழ் இலக்கிய மன்றம் ' நிறுவப்பட்டுள்ளது . மாதம் இருமுறை பக்கத்து ஊர்களிலுள்ள எழுத்தாளர்கள் , கவிஞர்கள் மற்றும் இதர படைப்பாளிகள் கூடி இலக்கியப் பொழிவுகள் நிகழ்த்தப்படுகின்றன . அவர்களை சிறப்பு செய்தும் அறக்கட்டளை உதவி புரிகிறது .

29.06.2008 அன்று எனக்கு மூத்த எழுத்தாளன் எனும் தகுதிப்பாட்டின் கீழ் அறக்கட்டளை நிறுவனர் சிறப்பு செய்தார் . கவிஞர் கலியுகன் கோபி எனக்கு கைத்தறித் துவாலையைப் போர்த்தினார்.

படத்தில் நான் , கவிஞர்கள் உமாபதி , கலியுகன் கோபி , இனியன் ( எச்.எம்.இனயத்துல்லா ) மற்றும் அறக்கட்டளை நிறுவனர் திரு.திரிசங்கும் இருக்கிறோம் .

No comments:

Post a Comment