Saturday 5 February 2011

நினைவுகளே கொஞ்சம் நில்லுங்கள் – 4

2006 ஆம் வருடம் சூலைத் திங்கள் 29 ஆம் நாளில் விழுப்புரம் நகரில் தென்பெண்ணை இலக்கிய கூடல் - நூறு பூக்கள் அறக்கட்டளை இரண்டும் இணைந்து அமரர் புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவு அரங்கம் நடத்தியது .
பேராசிரியர் கவிஞர் த.பழமலய் தலைமை ஏற்க , முனைவர்.பத்மாவதி விவேகானந்தன் , குரு.ராதாகிருஷ்ணன் , ப.திருநாவுக்கரசு ( ஆசிரியர் - நிழல் ), எஸ்ஸார்சி , இரா.இராமமூர்த்தி , இரா.முருகப்பன் , மு.இராமமூர்த்தி ஆகியோர் சிறப்புப் பொழிகளை ஆற்றினர்.


இயக்குனர்கள் ஜே.மாதவராஜ் (பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மருமகன் ) , எம்.வெங்கடேசன் பழனிவேல் ஆகியோரின் குறும்படங்கள் 'நடைபாதை ' 'கோபாலையங்காரின் மனைவி ' ' இரவுகள் உடையும் ' ' பள்ளம்' 'ஸாரிடா ' என ஐந்து குறும்படங்கள் திரையிடப்பட்டன .

அரங்கில் சிறப்புப் பொழிவின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் . படத்தில்,ப.திருநாவுக்கரசு, ஜே.மாதவராஜ், முனைவர்.பத்மாவதி விவேகானந்தன் , பழனிவேல் ஆகியோர் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment