Saturday 5 February 2011

நினைவுகளே கொஞ்சம் நில்லுங்கள் – 5

ராயங்கலஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜம் . இலக்கியவாதிகளுக்கு இவரது வாழ்த்து கிடைக்க தவமிருப்பர்கள் . கரிசல் இலக்கியமும் , நாடோடி இலக்கியமும் இவரது இரு கண்கள் . கடந்த 18.12.1991 அன்று இவருக்கு சாகித்ய அகாதமி பரிசு செய்தி ரேடியோவில் ஒலிபரப்பானது .

இவர் யார் தெரியுமா நம்ப கி.ராஜநாராயணன் தான் . சுருக்கமாக அனைவருக்கும் கி.ரா.

2010 செப்டம்பர் 16 ஆம் நாள் இவருக்கு 88-வது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் நடந்தது.இவர் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ( கடந்த 6 வருடங்களாக ) கரிசல் கட்டளை இலக்கிய விருது தரமான சிற்றிதழுக்கு வழங்குகிறார் . பிறந்த நாள் விழாவை கி.ரா.வின் அபிமானிகளும் , நண்பர்களும் தான் நடத்துகின்றனர்.



விழா நடக்கும் நாளுக்கு முன்பாக எல்லோருக்கும் செவி வழிச் செய்திகளாகப் போய்ச் சேரும் .

என் நண்பரும் , பிரபல எழுத்தாளருமான பா.செயப்பிரகாசம் என்னை விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் . புதுச்சேரிக்கு சென்றேன் . ஐம்பது பேர் கூடினோம் .வெளியூரிலிருந்து வந்திருந்தவர்கள் நாங்கள் மூன்று பேர்கள். எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம் , கழனியூரன் , நான் .

விழாவில் கி.ரா அவர்களுக்கு ஆய்வாளர் சுப்ரமணியன் எழுதிய ' உபதேசியார் சவரிராயப்ப பிள்ளை வரலாறு ' நூலை நான் அளித்தேன் . அப்போது எடுக்கப்பட்ட நிழற்படம் இது .

படத்தில் பா.செயப்பிரகாசம் , கரிசல் கட்டளை இலக்கிய விருது பெறும் ' மந்திரச்சிமிழ் ' சிற்றிதழ் ஆசிரியர் , முனைவர் க.பஞ்சாங்கம் ஆகியோர் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment