Friday 8 April 2011

இசக்கி செய்த கொலை


'ஏட்டி....மூதி....இன்னா விசயம்டி......கையில அருவா வேற......என்ன பண்ணுனேடி.......வௌராமா சொல்லுலே......முட்டிக்கு முட்டி தட்டி.......அன்னா பாரு.......தெரியுதுல்ல கம்பி போட்ட ரூம்பு.......அங்கன பூட்டி வெச்சு கொண்ணுபோடுதேன் ஒழுங்கா. சொல்லுடி........'

மூன்றடைப்பு காவல் நிலையத்தில் ஏட்டு ஏகாம்பரம் எதிரில் நிற்கும் பெண்ணிடம் பேசுகிறார். அவரது பணிக்காலத்தில் இதுவரை ரத்தக்கறை படிந்த வீச்சரிவாளுடன் இளம்பெண் காவல் நிலையத்துக்கு வந்ததை அறிந்துதது கிடையாது. தலைவிரி கோலமாக நின்றிருந்தாள் அப்பெண். பத்ரகாளியை படத்தில் தான் பார்த்தவர் அவர். காவல் நிலைய ஆய்வாளர் மேலதிகாரியைப் பார்க்க பக்கத்து டவுனுக்கு போயிருக்கிறார்.

'ஒனக்கு....எந்தூரு....ஓம் பேரென்னடி? வௌரத்தை சொன்னாதான....நடவடிக்கை எடுக்க முடியும்......சொல்லுடி?'

ஏட்டையாவின் எல்லா கேள்விகளை கேட்டுவிட்டு அவளின் உதடுகள் லேசாக பிரிகின்நன. பதட்டம் குறையவில்லை.

'பெரியவங்களே.....நா சொல்றத பொறுமையா கேளுங்கையா.....நா....பக்கத்துல இருக்குற கருப்புக் கட்டி கிராமம்.......எம்பேரு எசக்கி......அப்பா....அம்மா......யாருன்னு தெரியாது........நா பொறந்தப்பவே துணில சுத்தி கருவாக்காடுல......மரத்தடியில போட்டுருந்தாங்களாம். யாரோ....மவராசி......என்ன தூக்கி வந்து ஊர் சாவடில இருந்தவற்ககிட்டே.......கொடுத்தாங்களாம். எறக்கப்பட்ட சனங்க எனன் எப்படியோ வளத்து விட்டுட்டாங்க......'

எசக்கிக்கு நா வரட்சியைக் கண்ட ஏட்டையா தண்ணீர் குடிக்கக் கொடுத்தார். மடக்கு மடக்கென அதைக் குடித்த அப்பெண்ணை கண் இமைக்காது பார்த்தார்.

'அப்புறம்.....?

நிமிர்ந்த ஏகாம்பரம் இப்போது தான் நிதானித்துச் சரியாகப் பார்க்கிறார். எசக்கி ஆசுவாசம் தேடுகிறாள்.

வாளிப்பும், நிமிர்ந்திருக்கும் மார்புகளும், பார்த்தவரை மீண்டும் திரும்பிப் பார்க்கவைக்கிற சொக்கும் அழகுதான். ஆனால் வறுமையின் எச்சங்கள் அவளிடம் அதிகம். சலவைகாணா சேலை,ரவிக்கையில் நிறைய கிழிசல்கள் தெரிந்தன். சேலையின் கிழிசல்களை அழுக்கடைந்த உள்பாவடை மறைத்தன. ஆனால் ரவிக்கையின் கிழிசல்களை மறைக்க உள்ளாடை அணியவில்லை. அவளிடம் ஈர்ப்பு கொள்ள வைக்கும் விசயங்கள் நிறைய இருந்தன.

மறுபடியும் ஓப்புதல்கள் அவளிடமிருந்து வெளிவருகின்றன.

'எல்லா வூட்டு திண்ணைகதான் ராவுல எனக்கு அடைக்கலம்.....வெடிஞ்சதும் முடிஞ்ச அளவுக்கு வீட்டு வேலைகளை கொடுப்பாங்க.....அதோட பலகாரமும் கெடைக்கும். குpராமத்து வீடுகள்ல எல்லாரும் சொன்ன வேலைகள் செஞ்சு தருவேன். கஞ்சியோ, கூழோ கெடைக்கும். பசியாறுவேன்... சில நாளு கருவேலங்காட்டுக்கு போயி.....சுள்ளி பொறுக்குவேன்......முள்ளுக குத்தி கையெல்லாம் ரத்தம் கொட்டும். வெரலுக.....புண்ணா வலிக்கும். என்ன செய்றது. வவுத்துப்பாடு இருக்கே......'

'சுள்ளி கட்டுகள சொமந்து வீடுகள்ள போடுவேன்......காசும் காப்பித் தண்ணியும் கெடைக்கும்..... கெடக்குற காசுகளை  எம்மேல பிரியமா இருக்குற அம்மா ஒருத்தருகிட்ட கொடுத்து வெச்சிருக்கேன்.....மொத்தமாசேந்தததும்.......புதுசேலை, லவுக்கை வாங்கணும்........'

தடங்கல்கள் இல்லாத பேச்சு ஏகாம்பரத்தை வியக்க வைக்கிறது.

'மேல.....சொல்லு எசக்கி....'

'கிராமத்துக்கு...மேக்கே .....சித்தாறு போகுது......அதுல வர்ற தண்ணிதான்.......ஊர்குளம் நெரம்பும்.....ரெண்டு பாலங்க இருக்கு பாதையிலே......அந்த இரண்டு பாலத்தைத் தாண்டித்தான் சுள்ளி பொறக்கப் போவணும்.  sila நா தண்ணிவரும்.'

'இன்னகை;கி காலைல நான் வேலை இல்லாம போனதால் சுள்ளி பொறுக்கப் போனேன். போனேனா......முத பாலக்கட்டையில் ஒருத்தன் ஒக்காந்திருந்தான்.......கையில இந்த அருவா இருந்திச்சி....'

'ஏய்....நில்லுடின்னா....ஒன்னைய தெனமும் இந்த வழில போறப்ப பார்க்குறன்டி.....நீ பாட்டுக்கு போறீய....ன்னான்....வெரசா நடையைப் போட்டேன்...முன்னால கையை விரிச்சிகிட்டு மறைச்சான்...என்ன கவனிடீன்னான்.....'

பிடிவாதமா....என் கைகளை பிடிச்சிகிட்டு நின்னான். நான் கைகளை உதறிவிட்டேன்....வீம்பு பண்ணாதடி ....ஒழுங்கா நா சொல்றத கேட்ட.....ஒனக்கு தாலி போட்டு ராணி மாதிரி வெச்சுப்பேன். கட்டுறதுக்கு சேலை...போட்டுக்க நகை நட்டெல்லாம் கொடுக்கேன்னா......'

'சுத்தி முத்தி பார்த்தேன்....ஆள் அரவம் கிடையாது. சத்தம் போட்டாலும் ஒருத்தரும் ஒதவிக்கு வரமாட்டாகன்னு தெரிஞ்சுது......யோசிச்சேன்....'

'சரி....விடுயா...நீ இப்ப என்ன சொல்லுத....'

'பாலகட்டைக்கு கீழே வாடி எல்லாம் தெரிஞ்சுக்குவே'

'அங்கன்ன போனேன்....பாலகட்டைமேடு....கீழநெறய பள்ளம். மணலு நெறய....மறுபடியும் யோசிச்சேன்.

'தெனமும ஒன்னய பாக்குறறேண்டி. ஆனா உனக்கு தெரியாதுடி....ஒன்னோட அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடி. சேலையை அவுத்துப்போட்டு விரிச்சு படுடினான்.'

'ஐயா....ஒனக்கு புண்ணியமாய் போவுது......விட்டுறையா என்ன.... எனக்கு கலியாண ஆசையெல்லாம் கெடையாதுன்னேன்.'

'பிடிவாதமா இருந்தான்....அவங்க காலப் புடுச்சி.....கெஞ்சினே....'

'அருவாலி.....தூக்கி காண்பிச்சு இங்கையே....ஒன்னை கொன்னு போடுவேன். ஒரு பயலும் ஒதவிக்கு வரமாட்டான் படுடீன்னான்.

எங்கிட்டே இருக்குற சீல இது ஒன்னுதா.....இதை வெரிச்சுப்போட்டா அழுக்காயிடும்.....அதிகமா கிளிஞ்சிடும். ' ஒ வேட்டியை அவுத்து விரியான்னேன்.' யுhராச்சும் பார்த்துட்டாலும் அவசரமா சேலையோட எந்திடுச்சி என்னால ஓட முடியும் அதுதான........'

'நான் சொன்னதை ஒத்துக்கிட்டான். அருவாள பக்கத்துலே கீழே வெச்சான். வேட்டியோட முனைகளை செரி பண்ண கீழே குனிஞ்சான். பக்கத்திலே அருவாளை விடுக்குன்னு எடுத்தேன். அவன் நெமிரத்துக்குல்ல போட்டேன் ஒரே போடு. துலை துண்டாகி விழுந்திடுச்சி......'

'அதுக்கப்புறந்தா...எனக்கு கைகால்லாம் நடுங்கிடுச்சு. மயக்கமாவருது.....தகிரியமா கையில அருவா எடுத்துக்கிட்டு வேகமா ஊர் மணியக்காரரிடம் போயி- நடந்ததை சொன்னேன்.....அவரு இங்குப் போயி வௌரம் சொல்லுகே நான் பின்னால் வர்ரேன்னாரு. வந்துட்டேன். பெரியவுகளே.......நீங்க என்ன தண்டனை கொடுத்தாலுஞ்சரி.....ஏத்துக்குறேன்.

ஏட்டு ஏகாம்பரத்துக்கு வியப்பு. வித்தியசமான கொலையாளியைப் பார்க்கிறார். பிந்தைய வார்த்தைகளில் அவரது மரியாதை தெரிகிறது.

'சரிம்மா....அந்த மொடிவா பொணம் அங்கனதான கெடக்கு'

' ஆமாய்யா....' முடிக்கு முன்னே மணியக்காரர் புகாருடன் சந்திக்கிறார்.

நிலைய ஆய்வாளரும் உள்ளே நுiகிறார். மணியத்தின் புகாரும், கொலை விவரமும் அவருக்கு சொல்லப்பட்டது. இரண்டு காவலர், ஆய்வாளர்ஈ மணியம் சகிதம் ஜீப் புறப்பட்டு சென்றது.

தனியே குப்புற கிடந்த முகத்தை திருப்பினார் காவலர் ஒருவர். ஆய்வாளர் திகைப்பின் விளிம்புக்கே சென்றார்.

புல கொலைகளைச் செய்மு காவல்துறைக்குப் போக்குக் காட்டி தப்பித்து வந்த கேடி சகடைப் பாண்டிதான் அது.

தற்காப்புக்காக, கற்பைக் காக்வும் துணிந்து விட்ட இசக்கியின் துணிவு ஆய்வாளரை மகிழ்ச்சி அடையச் செய்தது.

செய்தித்தாளில் விவரங்களுடன் இசக்கி படம், கேடி சகடைப் பாண்டி படத்துடன் விளக்கமாக வெளிவந்த செய்திகள் வாசிக்கப்பட்டு கிராம மக்களின் கவனத்துக்கு உள்ளானது. ஊர் கூடி எப்பாடு பட்டும் இசக்கியின் விடுதலைக்கு எல்லோருக்கும் பாடு பட சங்கம் செய்து கொண்டனர்.

கருப்புக்கட்டி கிராம இளம் பெண்களுக்கு இந்த செய்தி பாடமாகிப் போனது. புல ஆண்டுகளுக்குப் பின்னால் இசக்கி தெய்வமாகிப் போனாலும் வியப்பில்லைதான்.

எதையும் துணிவோடு தைரியத்தோடும் செய்ய பெண்களாலும் இயலும்.


நன்றி – கதை சொல்லி -    காலாண்டிதழ் ஜீலை – செப்டம்பர்.

No comments:

Post a Comment