Friday 8 April 2011

செத்தும் கெடுத்தான்

.
'நீங்கதா.....காப்பாத்தணும் சாமீ....நா....எங்கன போயி பணத்தைப் பொறட்ட.....அன்னாடங்காச்சி.....தயவு பண்ணுங்க.....'

'ஏலே....அதுதா தெரிஞ்ச கதயாச்சே....அந்தப் புத்தி இப்ப வந்து என்னா...லே...பெரயோச்சனம் ? மரத்தை வெட்னதுக்கு போலீசுல புடுச்சிக் கொடுக்காம....நெக்க வெச்சு பேசுதேன் பாரு......!'

'வேல செய்யுறதுக்கு முடியல சாமீ.....தெம்பும் அத்துப்போச்சு....'

சொடலை செய்யுறதுக்கு முடியல சாமீ... தெம்பும் அத்துப்பேச்சு....' விழுந்து கதறுகிறான் குடிகாரன். மூன்று பெண் பிள்ளைகள். ஒரு நாள் வயதுக்கு வந்து இரண்டு வருடங்கள். கவலையெல்லாம் தாய் பேச்சிக்குத்தான். பேருக்குத் தகப்பனான சொடலைதான் போதையில் மிதக்கிறானே!

முத்துப்பட்டி கிராம கருவேல மரக்கூட்டத்தில் மரம் வெட்டியதாக விசாரிப்பு வந்து சொல்ல, மணியம் விசாரணை நடத்துகிறார். சோடலையின் குடும்பமே கதறியழுகிறது.

பேச்சி பக்கம் தழரும்பினான், சொடலை.

'ஏட்டி.... சவத்துமூதி... சொல்லுடி நெசத்தை....' அவனுக்கு மேலும், கீழும் மூச்சு இரைத்து, குலசாமி அருள் வந்துபோல கை கால்களில் நடுக்கம்.

'இந்த ...மூதிகிட்ட வயசுப் புள்ளய கருவேலங் காட்டுக்கு அனுப்பாதேன்னு... கேட்டாளா.. அடுப்பெரிக்க சுள்ளிக்பொறுக்கச் சொல்லி அனுப்புதா... இப்ப கேக்குறாவ இல்ல... சொடலுடீ......'

 'சரிலே... சுள்ளி பொறுக்குதா.... விட்டுறலாம்... மரத்த வெட்டுனதா... அதுவும் சர்க்காரு வெச்ச மரத்iதை வெட்டுனா... என்ன நடக்கும்னு தெரியுமாலே... வெசயம் மேலிடத்துக்குப் போனா என்னயதா பணம் கட்ட சொல்லுவாகலே ... எல்லா எளவுக்கும் நா கட்ட முடியுமாலே... என்ன பண்ணுவியோ ஏது  பண்ணுவியோ... பணத்தை உடனே கட்டுற வழியைப் பாருலே... கட்டலே... வாசக்கா, தட்டுமுட்டு சாமான்லாம் ஏலத்துல போயிரும் லே....'

முத்துப்பட்டி கிராம  பெரியதனக்காரர்களில் ஒருவர் பரிஏறும் பெருமாள். நிலங்கள், நீச்சு  நிறைய. இரண்டு பெரிய பண்ணைகள். பண்ணயம் செய்ய நிறையப் பேர். பேச்சியும், சொடலையும் அவர்களில் அடக்கம்.

பேச்சி பெறும் கூலிப்பணம் மட்டுமே வீடுவந்து சேரும். சோடலையின் நணகளுமும் கூடவே ஆரம்பிக்கும். கூலி கைமாறும். ஊர்க்கோடி பணவிளை சாராய வியாபாரியிடம் அடைக்கலமாகும். பிள்ளைகளின் பசியடக்க பேச்சிக்குத்தான் பெரும் பாடுகள். பல  நாட்கள் அவர்களின் பசி காமா சோமாவென அடங்கிவிடும்.

பரி  ஏறும் பெருமாள் காலில் விழுந்து சொடலை அழுகிறான. நடந்த நிகழ்வுகளைச் சொல்லி கூப்பாடு போடுகிறான். அவருக்கு இரக்க குணம் அதிகம். தன்னிடமே நிலவரியை வசூலித்துப் பின் மறுதலித்து மீண்டும் வரிகளைப் பெற்ற கில்லாடி மணியம் கந்தசாமி  என்ன செய்வது? இனத்தானாகப் போய்விட்டானே! காரியத்தார் மூலம் சொடலை கட்ட வேண்டிய பணத்தை அனுப்பினார்.

'இத்தா...லே... மணியம் திரும்ப  பணம் கட்டச் சொன்னாருன்னா அத காட்டு... லே...' ரசீதை மட்டும் சொடலையிடம் தந்தனார். வுழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பெரிய கும்பிடு போட்டு நகர்ந்தான்.

'ஏட்டி....மூதி ...இத அந்த முடிவான்கிட்ட கொடுக்காத பொட்டப்புள்ளய தனியா அனுப்பாத... போ... மொதல்ல புள்ளாக பசியாகத்து....' பவ்யமாக சேலை முந்தானையை விரித்துக் ரூபாய் நோட்டைப்பொற்றாள் பேச்சி. முழந்தாளிட்டுக் கும்பிட்டான். எழுந்தாள். பிள்ளைகளும் அவள் பின்னே சென்றனர்.

திருநெல்வேலி மேல்பாளையம் மரம் அறுப்புக் கடைக்காரரிடம் கருவேலம், வேம்பு, மரங்களை வெட்டி வண்டிகளில் அனுப்பி, பின் விசாரிப்பு மூலம் மணியம் பணம் பெற்றுக் கொண்ட விபாங்கள் பின்னாளில் பரிஏறும் பெருமாள் காதுகளுக்குச் சென்று சேர்ந்தன. கூடுதலாக வசித்து வரும் கிராம  பெரிய தனக்காரர்களின் இனத்தான் என்ற தகுதி மணியம் கந்தசாமிக்கு கூடுதல் சலுகையாகிப் போனது. கேள்வி கேட்க ஆளில்லை எனும் மிதப்பில் அவரின் அக்கிரமங்கள், ஆர்ப்பாட்டங்கள் கும்மாளம் போட்டன.

கிராமத்திற்கு வெளியில் தெரியாத பணக்காரர் மணியம் கந்தசாமி புறம்போக்கு நிலத்தைக் கை மாற்றி பட்டாவுக்கு ஏற்பாடு, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், சொத்து மதிப்பு ஆகிய சான்றுகளுக்கு பணம் இல்லாமல் வழங்க மாட்டார். அவர் காட்டில் பண மழைதான், எப்போதும்.

மேலிடத்துக்கு நிறைய புகார் மனுக்களை அனுப்பினர் கிராம மக்கள். ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்குவதுதானே மரபாகிப் போன காலம். அவ்வப்போது அரசு ஜீப்பில் தாசில்தார் வருவார். மக்களின் முன்னிலையில் மணியத்தைக் கடுஞ்சொற்களால் சாடி விட்டுப்போவார். சின்னத்திரை நெடுந்தொடர்போல் இது வழக்கமாகிப்போனது. பலன்தான்
ஏதுமில்லை.

ஒருநாள்-மதிய உணவு அருந்தும் போது கந்தசாமி மயக்கமாகி விழுந்தார். நெல்லையில் தனியார் மருந்துவணையில் சேர்க்கப்பட்டார். கோமா நிலைதான் என மருத்துவர்கள் சொன்னார்கள். எட்டாம் நாளில் கண் விழித்து மலங்க மலங்கப பார்த்தார். மனைவி, மகன், மகளைப் பார்த்தார்.

மனைவியிடம், 'தாயீ... என தாத்தா காலத்திலிருந்து மணியம் வேலை தொடர்ந்து நம்ப குடும்பத்துக்கு வருது அவ்வளவும் சர்க்காரு தரும் சலுகை. எனக்குப் பின்னால மகனுக்கு வேல தருவாங்களோ.... என்னமோ. என்னோட முடிஞ்சிடும் போலிருக்கு.... சர்க்கார்லதான் நெறய மாறுதல்கள் நடக்குதே....'

'இப்ப... இதெல்லாம் எதுக்கு...வீட்டுக்குப் போயி பேசிக்கிடலாமே....' முனைவி வசந்தாவின் வார்த்தைகளைக்கேட்டு மௌனமானார் கந்தசாமி.
மீண்டும்....'இல்ல தாயி... நம்மூரு சனங்களுக்கு நெறய கொடுமைகள செஞ்சிட்டேன். அவுங்க பட்ட கஷ்டத்தை ரசித்சேன்....நா பாக்கோணும் ...அவுகள வரச் சொல்லுதயா...'

எல்லோரும் மருத்துமணையில் கந்தசாமியைப் பார்த்தனர்.

கந்தசாமி கும்பிட்டார். 'எல்லோரும்... வாருங்க... நா நெறயப் பேருக்கு கொடுமைகள செஞ்ச பாவி... என்னை நீங்க மன்னிக்கணும். நூ பொழக்கிறது சிரடமந்தான். என் விருப்பத்தை சொல்லுதேன்.

அதுபடி செய்வீங்களா?....'

 'நீரு.... என்ன சொல்ல வர்றிரு...? வெளங்கும்படியா சொல்லும்' ஊர்ப் பெரியவரின் கேள்வி.

 'நா.... இறந்தும் பாடை ஏதும் கட்டாதீக்.... பச்ச மட்டை தடுக்கில படுக்க வையுங்க வெத்து உடம்புல நீங்க எல்லாரும் கல்லால, மண்ணால, குச்சியால, கம்பால ஏன் செருப்பாலயும் அடிச்சுக்கிட்டே இழுத்துட்டுப்' போகணும், இதுல ஆம் பிளை, பொம்புளை, சின்னப் புள்ளைனு வித்தியாசம் பார்க்கவேணாம். புதைழுகுழியிலே தை;தக்காயங்களோட பொதைச்சா....தா, என ஆத்துமா சாந்தி அடையும்.... சேய் வீகளா? செய்யணும்....நா-செஞ்ச கொடுமைகளுக்கு இதுதா பரி காரம்' எல்லோரும் நெகிழ்ந்து  போயினர்.

 சொல்லி முடித்த கந்தசாமி தலை பக்கவாட்டின் சாய்ந்தது. குடும்பம் அழுதது. கூடியிருந்ம கூட்டத்தினரில்சிலரின் அழுகை ஒலிகளும் கேட்டன. கந்தசாமியின் விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் ஒப்புதல் தந்தனர்.

 கந்தசாமியின் விருப்பப்படியே காரியங்கள் நடந்தன. சுடுகாட்டில் அவரது சடலம் பயங்கரமாக காட்சி தந்தது. ரத்தவிளாறுகள், கண்களில் ரத்தத் துளிகள். வாய் கிழிந்து உதடுகள் பாளம் பாளமாயின. இடுப்பில் புதுவேட்டி இருந்தால் இடுப்புக்குக்கீழ்  தொடை கால்களில் காயம் ஏதுமில்லை. ஆனால் பாத விரல்கள் சிலவற்றைக் காணோம் ஊர் சனங்னகளில் ஆத் திரம், வெறுப்பு வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்டிருந்தன சடலத்தின் மீது.

 சடலம் புதைகுழியில் இறக்கப்படும் நேரம் ' நிறுத்துங்கள் நிறுத்துங்கள்' என ஒலிகள் வந்த திசைநோக்கி எல்லோரும் திரும்பினர்.

 ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் பட்டாளம் ஓடிவந்து கந்தசாமியின் சடலத்தை உன்னிப்பாக கவனித்து. கந்தசாமி மருத்துவமனையிலிருந்து அனுப்பிய புகார் மனுவை ஆய்வாளர் சத்தம் போட்டுப் படித்தார். பெரியதனக்காரர்கள் ஊர் சனங்களின் முகங்களில் அதிர்ச்சிக் கோடுகள்

 'அவர் குறிப்பிடிருந்தபடியே செத்த பின்னும் சடலத்தை ஆத்திரத்துல சேதப்படுத்திக் கொடுமைகளை செய்திருக்கீருங்க நடங்க ஸ்டடேஷனுக்கு' என கட்டளை பிறப்பித்தார் ஆய்வாளர்.

 ஊர் சனங்களில் சிலர், பெரிய தனக்டகாரர்களில் சிலர் போலீஸ் வேனை நோக்கி நடந்தனர். அவாகளில் பரிஏறும் பெருமாள், சொடலையும் இருந்தனர்


நன்றி – கதை சொல்லி  காலாண்டிதழ் ஜன– மார்ச்-2010

No comments:

Post a Comment