Sunday 28 October 2012

3.ஐசக் நியூட்டன் (1642-1727)


மரத்தின் கிளையிலிருந்து ஆப்பிள் பூமி நோக்கி விழுந்ததைப் பார்த்து புவிஈர்ப்பு சக்தியின் விதிகளைக் கண்டார். இயற்கை ஒளியில் ஏழு வண்ணங்களின் கலவை உள்ளடக்கியது என்பதை தன் ஆராய்ச்சிகள் மூலம் கண்டார். இவ்விரண்டின் முடிவுகளையும் உலகுக்கு அறிவித்தார் ஐசக் நியூட்டன்.

இவர் இங்கிலாந்தின் 'லிங்கன்ஷையர்' நகரில் ஐசக் நியூட்டன், ஹென்னா தம்பதியருக்கு 25-12-1642ல் பிறந்தார்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 'டிரினிட்டி கல்லூரி'யில் பட்டப்படிப்பை முடித்தவர் (1665)

அறிவியல் கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்ளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டமையால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே ஏழாது போனது.

எலி ஒன்றின் உதவியால் காற்றாலை இயங்கும் தொழில் நுணுக்கங்களைக் கண்டறிந்தார்.

அல்ஜீப்ரா கணிதத்தில் பிரயோகமாகும் 'கால்குலஸ் மற்றும் பயோனாமியஸ்' தேற்றத்தையும், கண்டுபிடித்தார் ( 1665 )

இவை பற்றி மேலும் ஆராய்ச்சிகளைத் தொடர டிரினிட்டி கல்லூரி ஃபெல்லோஷிப்பும் இவருக்குக் கிடைத்தது.

கண்ணாடி உராய்வுகளின் மூலமாக முதன்முதலில் லென்சுகளைத் தயாரித்தார் நியூட்டன்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் ஆனார் (1671). லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் அங்கத்தினர் நியமனமும் கிடைத்தது (1672 ).

இலத்தீன் மொழியில் ' பிலோ சோஃபியா நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்த மாடிக்கா'  என்னும் நூலை எழுதி வெளியிட்டார் (1687)

லண்டனிலுள்ள ராயல் சொஸைட்டியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் (1703).


1704ல் 'ஆப்டிக்ஸ்' என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.

சீர்ய பண்புகளும், ஒழுக்கமான நடத்தையும் கொண்ட ஐசக் நியூட்டன் பெற்ற தாயின் மீது அளப்பறிய பாசம் உடையவர்.

ராணி ஆனி என்பவரால் இவருக்கு 'சர்' என்ற கெளரவப்பட்டம் அளிக்கப்பட்டது (1705). அது முதல் சர் ஐசக் நியூட்டன் என அழைக்கப் பெற்றார்.

எண்பத்து ஐந்து வருடங்கள் வாழ்ந்து கிட்டத்தட்ட அறுபத்து இரண்டு வருடங்கள் அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவின் பயன்களைத் தெரிந்து மக்களுக்கு அறிவித்தவர் ஐசக் நியூட்டன்.

லண்டன் நகரில் 31-03-1727 அன்று காலமானார்.


குரு ராதாகிருஷ்ணன் 

No comments:

Post a Comment