Thursday 18 October 2012

1.ஆர்க்கிமிடீஸ் ( கி.மு.280 - கி.மு.211)



இயற்பியல் மற்றும் கணக்கியலுக்குள் தன் பங்களிப்பைச் செய்த அறிஞர் பெருமக்களில் ஆர்க்கிமிடீஸ் குறிப்பிடத்தக்கவர்.

எப்போதும் சிந்தனை வயப்பட்டவர் இவர். ஒருநாள் குளியலறைப் பேழையில் குளித்துக் கொண்டு இருந்தார். திடீரென எழுந்து 'யூரேகா! யூரேகா!' என்று கூவிக் கொண்டே ஒடினார்.

இத்தாலிய மொழியில் 'யூரேகாவுக்கு' நான் அதைக் கண்டுபிடித்து விட்டேன் என்பது தான் அர்த்தம்.

இவர் இத்தாலியின் 'சிசிலி' நகரில் கி.மு.280-ல் பிறந்தார். தந்தை பெயர் பீடீயஸ்.(PHEIDIAS)

இயூஸ்லிட் - சினான் (EUCLID-CENON) என்னும் பேரறிஞரின் வழித்தோன்றலும் தத்துவப் பேராசிரியருமான அலெக்ஸாண்ட்ரியாவின் இராடோஸ்தென்ஸ் (ERATOSTHENES) என்பவரிடம் கணித இயலைப் பாடம் கேட்டவர் ஆர்க்கிமிடீஸ்.

கணித இயலில் நிறையத் தேற்றங்களைப் பற்றிய புத்தகங்களையும் , இயற்பியலில் அதிகமாக எழுதியும் நூல்களை வெளியிட்டுள்ளார்.

திரவத்தில் ஒரு திடப் பொருளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூழ்க வைத்தால் அதற்கு இணையான எடையையோ அல்லது அதன் எடைக்குச் சமமான திரவத்தையோ இழக்கும் அல்லது வெளியேற்றி விடும் என்பது தான் ஆர்க்கிமிடீஸின் கண்டுபிடிப்பு ஆகும்.

போரில் எதிரிப்படையின் மீது பெரிய கற்களை விட்டெறியும் ஆயுதமாகப் (PROJECTILES) பயன்படுத்தும் நுணுக்கங்களைக் கண்டுபிடித்தார். குழி ஆடிகளைக் கொண்டு எதிரிகளின் கப்பல்களைத் தீயிட்டு அழிக்கும் உபாயங்களையும் வெளியிட்டார்.

அக்காலப் போர்களில் இந்தவித நுணுக்கங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதென வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஸ்குரூவும்,வானவியல் சம்பந்தப்பட்ட இரண்டு குளோப்புகளை (ASTRONOMICAL GLOBES) ஆர்க்கிமிடீஸ் கண்டுபிடித்தார்.

அறுபத்து ஒன்பது ஆண்டுகள் சிறக்க வாழ்ந்த இப்பெருமகனாரை கி.மு.211ல் 'சிராகுயிஸ்' (SYRACUSE) என்னும் இடத்தில் ரோமானியப் படை வீரர்கள் கொன்றனர் என்பது வரலாறு தெரிவிக்கும் செய்தியாகும்


குரு ராதாகிருஷ்ணன் 

No comments:

Post a Comment