Thursday 25 October 2012

2.கலிலியோ கலிலீ (1564-1642)


அறிவியல் மேதைகளில் உலகப் புகழ் பெற்றவர் கலிலியோ கலிலீ. இவர் இத்தாலியிலுள்ள 'பிசா' நகரத்தில் 15-02-1564ல் 'ஜிலியா அம்மானட்டி' 'வின்ஸென்ஷோ கலிலீ ' என்னும் தம்பதியருக்குப் பிறந்தவர்.

தனது பதினேழாம் வயதில் பிசா பல்கலைக்கழகத்தில் மருந்தியல் படிக்கச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பணமின்மையால் மருந்தியல் தேர்வு எழுத முடியாமல் போனது.

தமது பதினெட்டாம் வயதில் தான் 'பெண்டுலம்' விதியைக் கண்டுபிடித்தார் (1582).

பிசா நகரக் கல்லூரி ஒன்றில் கணிதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் 'பாடுவா' என்னும் ஊரிலுள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றினார். இறுதியில் 'ப்ளாரன்ஸ்' நகரக் கல்லூரியில் பேராசிரியராகவும் இருந்தார்.

விண்ணிலிருந்து விழுகின்ற எரிகற்களைப் பற்றிய விதிகளை ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தார்.

'ஏர் தெர்மா மீட்டர், ஹைட்ரோஸ்டாட்டிக் பாலன்ஸ்' ஆகியவைகளைக் கண்டுபிடித்தவரும் கலிலீ தான்.

முதன்முதலாக டெலஸ்கோப் ஒன்றைத் தயாரித்தார் (1609-10)

அண்டவெளியில் காணும் பொருட்களையும், சந்திரனின் பரப்பில் காணும் மலைகள், ஜூபிடர் கிரகத்தில் காணப்படும் விண்கலங்கள், சனி கிரகத்தைச் சுற்றிக் காணப்படும் ஒளிவட்டம் மற்றும் சூரியனில் காணப்படும் புள்ளிகளையும் தன் டெலஸ்கோப்பின் மூலம் பார்த்து ஆராய்ச்சிகளை நடத்தினார்.

'தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வொர்ல்டு' என்னும் புத்தகம் வெளியானது (1632). கலிலீயோவுக்கு இந்தப் புத்தகம் மிக்க புகழைச் சேர்த்தது.

இத்தாலிய அரசு இந்த நூலைத் தடைசெய்து பிரதிகள் அனைத்தையும் கைப்பற்றியது.

நான்கு வருடங்களுக்குப் பின் 'டயலாக் ஆன் தி நியூ சயின்ஸ்' என்னும் நூலை மீண்டும் எழுதி வெளியிட்டார் (1636).

இவருக்கு கண்பார்வைக் குறையும், காது கேளாமையும் முற்றிலும் ஏற்பட்டன. இவ்வித இழப்புகளுக்கு சில மாதங்களுக்கு முன்னமே முக்கியமான கண்டுபிடிப்பான 'மூன்ஸ் விசுவல் ஆஸிலேஷன்' பற்றி அறிவித்தார் (1637).

'மெசஞ்சர்ஸ் ஆஃப் தி ஸ்டார்ஸ்', 'ஆன் தி ஸோலார் ஸ்பாட்ஸ்', 'ஆன் தி நேச்சர் ஆஃப் தி காமெட்ஸ்', 'தி லாஸ் ஆஃப் மோஷன்' ஆகிய இவரது நான்கு நூல்களும் உலகப் பிரசித்து பெற்ற நூல்களாகும்.

இவரது வான சாஸ்திரம் பற்றிய ஆராய்சிசிகளின் கருத்துக்களுக்குத் தீவிர மதவாத அடிப்படைவாதிகளிடமிருந்து தொடர்ந்து உடன்பாடின்மையும் எதிர்ப்புகளும் தோன்றின. 

அவர்களின் தீவிர நடவடிக்கைகளின் மூலம் கலிலீயோவுக்கு ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

வாடிகனிலுள்ள கத்தோலிக்க மதத் தலைவரான போப்பரசரின் தலையீட்டின் பேரில் சில வாரங்களில் சிறையிலிருந்து கலிலீயோ விடுதலை பெற்றார்.

ப்ளாரன்சுக்கு அருகிலிருக்கும் 'ஆர்செட்ரி' என்னும் ஊரில் 08-01-1642ல் கலிலீயோ இயற்கை எய்தினார். மரணத்தின் போது இவரின் வயது எழுபத்து எட்டு வருடங்கள்.

இவரது ஆராய்ச்சி முடிவுகள் இந்த நூற்றாண்டின் விண்வெளி அறிவியலுக்குப் பெரிதும் முன்னோடியாக விளங்குகின்றன


குரு ராதாகிருஷ்ணன் 

No comments:

Post a Comment