Monday 30 July 2012

தவறு செய்யாது இருக்க



குழந்தைகள் பிறக்கும் போது நல்லவர்களாகத் தான் இருக்கின்றனர்.

அவர்களின் வளர்ப்பின் ஊடாகத் தான் நல்லவர் தீயவர் ஆக்கப்படுகின்றனர்.

அனைத்து பெற்றோர்களும் பிள்ளைகளை ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக வளர்ப்பதில் அக்கறை மிக்கவர்கள் தான்.

பின்னாளில் பிள்ளைகள் வளர்ந்ததும், தடம் மாறிப் போவது சாதாரண விஷயமாகிப் போனது.

மேலைநாட்டு நாகரீக மோகம், மாஸ்மீடியா எனப்படும் டெலிவிஷன், வீடியோ காசட்டுகள் தான் அவைகளுக்குக் காரணமாகிவிட்டன.

தடம் மாறும் இளைஞர்கள், பெண் பிள்ளைகளும் தான் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு.

நமது நடவடிக்கைகள் யாரோ ஒருவரால் கவனிக்கப்பட்டு விடும். செய்தி தங்கள் பெற்றோரிடம் போய்ச் சேர்ந்து விடும் என்ற எண்ணம் மனதில் எழ வேண்டும், எப்போதும்.

உணர்வுபூர்வமாக எண்ண வேண்டும். அதுவே குற்றங்களைச் செய்வதை தடுத்துவிடும்.

போதைப் பொருளுக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ மானவிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகின்றன.

அப்பா பிள்ளையை சபையில் முன் வைத்து உதவ வேண்டும்.

தன்பிள்ளை கலெக்டர், டாக்டர், இன்ஜினியர், சாஃப்ட்வேர் இன்ஜினியர் என உருவாகப் போகிறான். தரம் மிகுந்த எதிர்பார்புகளே இவைகள்.

மகன் அறிஞன் என்பதைக் கேட்ட தாய் அவனைப் பெற்றெடுத்த காலத்தை விட அதிக சந்தோஷப்படுவாள் என்ற குறளுக்குப் பெருமை சேர்க்கும் பிள்ளைகள் இருந்தால் அதன் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா ! எதிர்பார்ப்புகளும் தோற்றுப் போவதில்லை.

போதைப் பொருளின் மீதான் விழிப்புணர்வைப் பெறுங்கள். நாளைய உலகம் நன்றியுடன் உங்களை கரம் கூப்பி வரவேற்கும். சமூக விரோதிகளை விட்டு விலகுங்கள்.

பெரியவர்களை எண்ணிக் கொண்டாலே போதும் இளைய தலைமுறையினர் குற்றம் செய்ய மாட்டார்கள்.

சிறைக் கைதிகளிடம் உரையாடியவர்கள் தெரிவிக்கும் முடிவுகளைப் பார்ப்போம். பெரும்பாலான கொலைகள் உணர்ச்சிக் கொந்தளிப்பினால் நிகழ்ந்தவைகள்.

‘தலைல, லேசா தான் தட்டினேன். பொட்டுன்னு போய்ட்டா’ என்று மனைவியின் சாவை நியாயப்படுத்தும் கணவன் சிறையில் தனிமையில் சிந்திக்கிறான். தெளிவு பிறக்கிறது.

குடும்பம்,குழந்தைகள் சிதைந்து போனதை எண்ணி வாடுகிறான். குற்றம் செய்வதற்கு முன் யோசித்து இருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமோ ?

தவறுகள் நிகழாதிருக்க நல்ல வழிகளைச் சிந்தித்து எல்லோரும் கடைப்பிடிப்போம்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment