( 27-07-2012 தினமணி நாளிதழில் வெளியான கடிதம் )
'வரலாற்று இரவு' கட்டுரை படித்தேன் . தடயங்களும் , ஆவணங்களும் இருந்தும் கூட நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன் சில இடங்களில் நடந்த சம்பவங்களைச் சரியான முறையில் பதிவு செய்யாத, செய்ய விரும்பாதவர்கள் செய்த வரலாற்றுப் பிழைகள் இருப்பது உண்மை தான்.
இதெல்லாம் சரிசெய்யும் அளவில் ஈரோடு ' மக்கள் சிந்தனை பேரவை'யின் தலைவர் எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன் தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளிலுள்ள பாரத விடுதலைப் போர் தியாகிகளின் வரலாற்றை அரும்பாடுபட்டுத் திரட்டி , ' சுதந்திரப் போர் ' எனும் பெரிய நூலை எழுதியுள்ளார் . இதற்கான தரவுகளை, ஆவணங்களை , நிழற்படங்களைச் சேகரிக்க அவர் பட்டபாடுகள் அதிகம்.இந்நூலை கட்டுரையாளர் வாசித்திருப்பின் அவரது நிலை வேறாகியிருக்கும் .
குரு ராதாகிருஷ்ணன்
நன்றி : தினமணி நாளிதழ் 27-07-2012
No comments:
Post a Comment