Friday 27 July 2012

உண்மை தான் ...

( 27-07-2012 தினமணி நாளிதழில் வெளியான  கடிதம் )

'வரலாற்று  இரவு' கட்டுரை படித்தேன் . தடயங்களும் , ஆவணங்களும் இருந்தும் கூட நூறு  அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன் சில இடங்களில் நடந்த சம்பவங்களைச்  சரியான முறையில் பதிவு செய்யாத,  செய்ய விரும்பாதவர்கள் செய்த வரலாற்றுப் பிழைகள் இருப்பது உண்மை தான்.






இதெல்லாம்  சரிசெய்யும் அளவில் ஈரோடு  ' மக்கள் சிந்தனை பேரவை'யின் தலைவர் எழுத்தாளர் ஸ்டாலின்  குணசேகரன்  தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டின்  பட்டிதொட்டிகளிலுள்ள பாரத விடுதலைப் போர் தியாகிகளின் வரலாற்றை அரும்பாடுபட்டுத் திரட்டி , ' சுதந்திரப் போர் ' எனும் பெரிய நூலை எழுதியுள்ளார் . இதற்கான தரவுகளை, ஆவணங்களை , நிழற்படங்களைச்   சேகரிக்க அவர் பட்டபாடுகள்  அதிகம்.இந்நூலை  கட்டுரையாளர் வாசித்திருப்பின் அவரது நிலை வேறாகியிருக்கும் .



குரு ராதாகிருஷ்ணன் 

நன்றி : தினமணி நாளிதழ்  27-07-2012

No comments:

Post a Comment