Friday 20 July 2012

தாழ்ச்சி, உயர்ச்சி பார்க்க வேண்டாம்



மகாகவி பாரதியார் பாப்பாக்களுக்குப் பாடியுள்ளார். உதாரணத்துக்கு –


சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் !
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்


பாப்பாக்களுக்கானது என எண்ணாதீர்கள். பெரியவர்களும் இப்பாடலை படித்துப் பயன் பெறுதல் அவசியம்.


சாதிகள் வருணாசிரம் தர்மத்தை வைத்து உண்டானது என்பர் சான்றோர்கள்.


சமுதாயத்தின் மொத்தத் தேவையே நான்கு வகைத் தொழில்களுக்குள் அடங்கி விட்டன.


நாட்டில் ஒழுக்கத்தையும், தர்மத்தையும், கட்டுப்பாட்டையும் கல்வியையும் வளர்ப்பது ;


போர் புரிந்து நாட்டைப் பகைவர்களிடமிருந்து காப்பது ;


வாணிகம், தொழில் நடத்தி நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பது ;


உடல் உழைப்பை மேற்கொண்டு குடியிருப்புகள், சாலைகள், தொழிற்கூடங்கள், உலைக்கூடங்கள் முதலியவைகளை அமைத்து மேற்கூறிய மூன்று வகையினருக்கும் உதவுவது.


இவ்வாறு வரையறுக்கப்பட்ட நியதிகளைப் பிற்காலத்தவர்கள் வேறுவிதத்தில் நினைக்கத் தலைப்பட்டனர்.


இதனால் வலிந்து தேடிக் கொண்ட வினைகள் ஏராளம். அவைகளை ஆராயப் புகுவதை நிறுத்துவது எல்லோருக்கும் நல்லது.


சமயம்,சாதி,இனம்,குலம் என்று பாராது எல்லோரிடமும் அன்பாகப் பழகுங்கள்.

நமக்கென்று நல்லவர்கள் பலர் கூடுவர். ஆபத்து காலங்களில் உதவுபவர்களில் பலர் முன்பின் அறியாதவர்களாகத் தான் அப்போது தெரிவர். அத்தகையோரிடம் மனிதாபிமானம் நிறைந்திருக்கும்.

பிறர் வீட்டு விசேடங்களில் கலந்து கொள்பவர்கள் பத்தோடு, பதினொன்றவதாக இருக்க முயலாதீர்கள்.


திருமண வீட்டிற்குச் சென்றால், நம்மால் முடியும் சிறிய வேலைகளைச் செய்ய வேண்டும்.


துக்க காரியம் நடந்த வீட்டிலும் அப்படியே செய்யுங்கள்.


இரு வீட்டாரிடமும் உங்களின் மதிப்பு உயரும். நாம் கேட்டுக் கொள்ளாமலேயே இவர் நம்முடைய வேலைகளைச் செய்கிறாரே ! உண்மையிலேயே நல்ல மனிதர் தான் என்று எண்ணுவார்கள்.


நாம் பிறர் மீது காட்டும் அன்பு நம்மிடம் திரும்ப வரும் போது கிடைக்கும் இன்பத்துக்கு இணை ஏதுமில்லை. அன்பு எல்லோருக்கும் பொதுவானது . அதை செலவின்றி கொடுக்கவும் பெறவும் முடியும்.



குரு ராதாகிருஷ்ணன்


No comments:

Post a Comment