நடைமுறை வாழ்க்கையில்
வணிகம் பரவலாக
அறியப்பட்டு நிறையப் பணம் சேர்க்கும் பிரிவாக
மாறிவிட்டன.
நமது அடிப்படைத் தேவைகள் மூன்று . உடை, உணவு, இருப்பிடம். வாடகை வீட்டிலோ அல்லது சொந்த வீட்டிலோ இருந்து விட்டாலும் மற்ற இரண்டுக்கும் வணிக நிறுவனங்களுக்குப் போய் வாங்கித் தான் தீர வேண்டும்.
சமுதாயத்தில் வியாபாரம் செய்பவர்களுக்குத் தனி மரியாதை தரப்படுகின்றன.
வியாபாரிகள் தங்களிடமுள்ளத் தரக்குறைவானப்
பொருட்களை பேச்சுத் திறத்தால் நம்மிடம் தள்ளி
விடுகின்றனர். வேறு வகையில் சொல்வதென்றால் தலையில்
கட்டி விடுகின்றனர்.
காய்கறியிலிருந்து உண்ணும் பொருட்களில் தன்மையை அறியாது, கடைக்காரரின் சாதுரியப் பேச்சினால் பெற்று வருகிறோம். வீட்டுப் பெண்மணிகள் அவைகளின் தரத்தை பிட்டுப்பிட்டு வைப்பார்கள்.
சமையல் பற்றி பெண்களுக்குத் தானே புரியும்.
நாம் எத்தனை விரைவில் ஏமாளியாக்கப்பட்டோம் என்பது அப்போது தான் தெரிய வரும்.
துணியோ அல்லது உணவுப் பொருட்களோ வாங்குவதற்கு முன்பே தரத்தைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது.
தரமான பொருட்களைப் பற்றி நண்பர்கள், அண்டை அயலாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நன்மை பயக்கும்.
'அக்மார்க்' தரம் வாய்ந்த பொருட்கள், குறிப்பிட்ட 'பிராண்ட்' துணிகள் வாங்குவதில் குறியாக இருத்தல் வேண்டும் . வேறு ரகங்கள் பற்றி கடைக்காரர் விரிவாக நீண்ட நேரம் பேசினாலும் கவனமாகக் கேளுங்கள்.
பேசி
முடித்த பின்
நம் விருப்பம்
, எண்ணம் முதலியவற்றைச்
சொல்லுங்கள். நாம் விரும்புகின்ற வகைகள் அந்தக்
கடையில் இல்லையென்றால்,
புறப்படுங்கள்.
வேறொரு கடையில் அம்மாதிரிப் பொருட்கள் நிறைய இருப்பில் இருக்கக் கூடும். நமக்கு வேண்டியவைகளை அந்தக் கடையில் தேர்வு செய்து கொள்ள முடியும்.
தயக்கம்
காட்டுவதால், கடைக்காரர் இழுத்த இழுப்பிற்கு செல்ல
வேண்டிய நிலை
ஏற்படும்.
கடைக்காரர்கள்,
தங்களின் பொருட்கள்
தரக்குறைவானவை என்பதை உண்மையாகக் கூற மாட்டார்கள்
என்பது ஊரறிந்த
ரகசியமே.
பிறரின் கேலி கிண்டல்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு தரமான உண்வு மற்றும் துணி வகைகள் என்னவென்பதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம்.
பணத்தைச் செலவு செய்து உடல் நலத்துக்கு தீங்கும். கந்தையாக விரைவில் உருமாறும். உணவு மற்றும் துணிகள் வாங்குவதை யார் தான் நியாயப்படுத்துவர்.
குரு ராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment