Friday 27 April 2012

ஒரு சொல் போதும்


நமக்கு நெருக்கமானவர்கள் , அறியாதவர்கள் என இரு பிரிவினர் எங்கும் உண்டு.

சிலருக்கு மற்றவர்களின் மூலமாகத் தான் காரியங்களை செய்து கொள்ள வேண்டும். அப்படியே பழகிப் போனவர்கள்.

காரியம், தன்மை, செயல்பாடுகள் மூன்றையுமே நெருக்கமானவர்களிடம் கட்டளைகளைப் பிறப்பித்து செய்ய முடியும்.

அறியாதவர்களிடம் அணுகிச் செயல்படுத்த சில எதிர்மறை விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வித வேறுபாட்டை கருத்தில் கொள்ளாமல் ஒரே விதமாக எண்ணி முயலுவதில் சங்கடங்கள் ஏற்பட்டு விடும்.

இங்கிதம் தெரியாதவன், உரிமைகளைக் கேட்டுப் பெறாதவன் என்ற பழியும் அதனால் எழக்கூடும்.

இரு சாராரிடமே அணுகும்போது பணிவுடனும், பவ்யமாகவும் நடந்து கொள்ளுதல் வேண்டும். அப்போது தான் நமக்கு வெற்றி கிடைக்கும்.

வீட்டிலுள்ள தொலைபேசியை நான் உபயோகிக்கலாமா என்று பணிவாகக் கேட்டுப் பாருங்கள். அனுமதி கிடைத்து விடும்.

அறியாதவர் எப்படி அனுமதிப்பது என்று மனம் சொன்னாலும் முன் அனுமதி கேட்டு விட்டாரே என சிறிது கீழே இறங்கி வருவார்.

நமக்கு மிகவும் வேண்டிய நண்பர். அவரது வேலையின் நிமித்தம் வெளியே செல்ல இருக்கிறார்.

அந்த வழியாகத் தானே நீங்கள் போகிறீர்கள். தயவு செய்து இந்தப் பொருளை வாங்கி வாருங்களேன் என்று சொல்லுங்கள். கோரிக்கை உடனே நிறைவேறும்.

தயவு செய்து என்னும் சொல்லுக்கு பலம் அதிகம்.

காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள இந்தச் சொல்லை பயன்படுத்தினால், அதன் வேகமே தனிதான்.

பல சமயங்களில் இந்த சொல்லைப் பயன்படுத்தி எண்ணற்ற உதவிகளைப் பெற்ற அனுபவம் எனக்கு நிறைய உண்டு.

நீங்களும் 'தயவு செய்து' என்று சொல்லிப் பாருங்களேன். காரியங்கள் மளமளவென்று நிறைவேறும்.




குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment