Saturday 14 April 2012

அயர்ச்சி வேண்டாம்

வாழ்க்கையில் எல்லோரும் வெற்றி பெறுகின்றனர் என்று நினைக்கிறோம்.

அவர்களில் சிலர் தோல்விகளையும் சந்தித்து இருக்கின்றனர்.

அத்தகைய தோல்விகளே, வெற்றிகளுக்குப் பாதைகள் வகுத்துத் தந்துள்ளன.

தொடரும் தோல்விகளால் விரக்தி அடைய வேண்டாம். அவைகளில் அனுபவங்களைப் பெறுகிறோம். கவனக்குறைவும் தோல்விகளின் தோழனே என்பதை அறிந்தவர்கள் துவள மாட்டார்கள்.

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருந்தால் அதிக தூரம் போக முடியும் என்று நமக்கு சொல்லிச் சென்ற அறிஞர்களை நினைவு கூறுங்கள்.

தோல்விகளைச் சமாளிப்பது எப்படி என்று சிந்தித்தாலே போதும்; அவைகள் நம்மை விட்டுத் தொலைதூரத்தில் சென்று விடும்.

நிரந்தரமான வெர்றிகள் அதிக அளவிலான தற்காலிகத் தோல்விகளிடமிருந்து தான் பிறந்திருக்கின்றன என்ற அறிஞர் பெருமகனின் முதுமொழியை எண்ணிப் பாருங்கள்.

அதை அப்படிச் செய்யாது, இப்படிச் செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என்று அசைபோடும் வழக்கத்தை விட்டுவிடுங்கள்.

காரணங்கள் நமக்குத் தெளிவைத் தரும். நடந்து முடிந்தவைகளின் வாயிலாகக் கிடைப்பவை, அனுபவங்களே என்று சிந்தியுங்கள்.

எந்த நிலையிலும் அயர்ச்சி கொள்ள வேண்டாம்.

வெற்றியினால் ஏற்பட்ட நட்டங்கள், தோல்வியால் பெற்ற லாபங்கள் இரண்டையும் எண்ணிப் பார்க்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் வலிய வந்து சேரும்.

வெற்றிகள் பெற்று உயர்ந்தவர்களும் இல்லை. தோல்விகளைக் கண்டு தாழ்ந்து போனவர்களும் கிடையாது.

அயர்ச்சி தான் நமக்கு முதல் எதிரி.

மனத்தளர்ச்ச்சி என்ற விதையை விதைப்பவர்கள் தாழ்வு மனப்பான்மை என்னும் மரத்தை வளர்க்கத் தயராகின்றனர்.

அயர்ச்சியை நீக்கித் துடிப்புடன் செயல்படுவோரை வெற்றி வணக்கம் செய்து வரவேற்கும்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment