இருபத்தி ஒன்றாவது நூற்றாண்டை நோக்கிச் செல்கிற நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அதிகம்.
தாத்தா கால உலகம் வேறு ; நம் பேரப் பிள்ளைகளின் உலகம் வேறு. இரண்டுக்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன.
உலக நாடுகளின் நடப்புகளை நம் வீட்டு வரவேற்பறையின் சின்னத்திரைப் பெட்டியில் கண்டு களிக்கிறோம்.
இன்றைய இளைஞர்களுக்கு முக்கிய கடமைகள் நிறைய இருக்கின்றன.
தங்களின் கடமைகளைச் சரிவரச் செய்து முடிக்க முயல வேண்டும்.
படிக்கும் இளைஞர்கள் புத்தகங்களை வெறுமனே புரட்டிப் பார்க்கும் நுனிப்புல் மேயும் நிலை வளரக் கூடாது.
படித்து முடித்து விட்டதாகப் பாவனை செய்தல் அறவே ஒழிக்க வேண்டும்.
கவனத்துடன் பாடங்களில் மன்மொன்றிப் படிக்க வேண்டும்.
தினமும் முடிந்த பாடங்களைத் தவறாது வீட்டில் படித்து முடித்தாலே போதும்.
தேர்வு சமயங்களில் இரவு முழுதும் கண் விழித்துப் படிக்கும் நிலை வராது.
சோம்பல் இல்லாது, மனதில் தங்கும் வகையில் பாடங்களைப் படிக்க வேண்டும்.
படித்து முடித்து விட்டதாகப் பாவனை செய்யும் மாணவன் தன்னையே ஏமாற்றுவான்.
தாம்பரத்திலிருக்கும் ஒருவர் அம்பத்தூரிலுள்ள நண்பரைப் பார்த்தபின் தலைமைச் செயலகம் செல்ல வேண்டிய கட்டாயம்.
அலாரம் வைத்து விட்டுப் படுத்தார். காலையில் அலாரல் அடித்தது. கடிகாரத்தின் தலையில் கைவைத்து அலறலை நிறுத்தினார். மீண்டும் படுக்கையில் படுத்து விட்டார். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது .
இரவு எடுத்த முடிவிலிருந்து விடிகாலையில் மாறி விடுகிறார். சோம்பலில் விழுந்து விடுகிறார்.
அம்பத்தூர் நண்பரால் நிறைவேறும் காரியம் வெறுமையாகி விட்டது . ஏமாளியாக மாறிவிட்டாலும், காரியத்தில் கோட்டை விட்டு விட்டார்.
இதே நிலை நீடிக்கும் போது, எல்லா விடுதல்களுக்கும் சமாதானமும், குற்றங்களுக்கு நியாயத்தையும் சொல்கின்ற கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
சோம்பலை வளர்த்துக் கொண்டவர்கள் வாழ்க்கையில் தோல்விகளையே சந்திப்பார்கள்.
சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் இருங்கள். வெற்றிகள் உங்கள் வீட்டுக் கதவை வரிசையில் நின்று கொண்டு தட்டும்.
குரு ராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment