Tuesday 14 February 2012

இடமறிந்து பேச வேண்டும்



எங்கு எப்படி பேச வேண்டும் என்பதைப் பலர் அறியாது இருக்கின்றனர்.

சூழ்நிலைக்கு ஏற்ப நம்ம பேச்சு அமைதல் வேண்டும் . பேச்சுத்திறன் மதிப்பை உயர்த்தும்.

நண்பரின் மகள் திருமணத்துக்குச் சென்றேன்.

மங்கல நாண் கட்டுவதற்கு முன்னால் நடைபெறும் சடங்குகளை நடத்திக் கொண்டிருந்தனர்.

திருமண மண்டபத்தில் கூட்டம் அதிகமாக இருந்தன.

கூட்டத்தின் மத்தியில் ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி நிறையப் பேர் உட்கார்ந்து கவனித்தனர்.

சுவாரசியமாக ஏதோ பேசப்படுகிறது என எண்ணிக் கொண்டு நானும் அங்கு சென்றமர்ந்தேன்.

டயானா, இளவரசர் சார்லஸ்ஸின் பாலியல் விவகாரங்கள் தான் அவரால் பேசப்பட்டன.

ஆறு நபர்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்ட இளவரசி டயானா, ஏழாவதாக டோடி பயஸின் காதலைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டே போனார்.

இங்கு இப்படி நடக்குமா ? அம்மாதிரியான பெண் கொலை செய்யப்படுவாள் அல்லது தாலியைப் பறித்துத் தாய் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். வாழும்வரை அவள் வாழாவெட்டியாகத் தான் இருப்பாள்.

பிரபல தமிழ் நடிகர் மனைவியை விவாகரத்து செய்து விட்டு கவர்ச்சி நடிகையுடன் சுற்றுவதைப் பேசினார். கூடியிருந்தவர்களுக்கு அவர் கூறும் செய்திகள் சுவாரசியமாகத் தெரிவது போல் தோற்றம் நிலவின.

நான் வேதனைப்பட்டேன். திருமண வீட்டில் பேசும் பேச்சுக்களா இவை ? நாவடக்கம் பற்றி நிறைய தெரிந்து வைத்திருப்பவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள்.

தாலி அறுப்பும் , விவாகரத்தும் அந்த வேளையில் தேவை தானா ?

அதே போன்று சாவு வீட்டில் அமர்ந்து கொண்டு தன் வீரப்பிரதாபங்களைச் சொல்பவரும் இருக்கிறார்கள். அவ்வீட்டாரின் துக்கத்தில் பங்கேதில் பங்கேற்று அஞ்சலி தெரிவிக்கும் இடத்தில் ஏன் வாய்ச்சவடால் ?

அவரை மெளனம் ஆக இருக்கச் சொல்பவர்கள் அரிது . மீறிக் கேட்டுக் கொண்டால், ஆமா ! செத்துப் போனவர் திரும்பியா வரப் போகிறார் ? அவருக்கு வேண்டியவர்கள் எல்லோருமே அவர் பின்னாலே சென்று விடுவார்களா ! என மறுமொழி கூறுவார்.

இருவரும் இடமறிந்து பேச இயலாதவர்கள்.

சமூகத்தில் நம் மதிப்பு உயர வேண்டும் என எண்ணுபவர்கள் ; சமுதாயத்தில் பெயர் பெற வேண்டுமென்று நினைப்பவர்கள் இடம் , காலம் அறிந்து பேச வேண்டும்.

தெரியாவிட்டால், இடமறிந்து பேசுபவர்களைக் கவனித்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் .


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment