Saturday 13 April 2013

26. வின்சென்ட் வான் கா (1853-1890)

வாழும் காலத்தில் ஒவிய நண்பர்களோடு சேர்ந்து எண்ணற்ற ஒவியங்களைப் படைத்து உலகப் புகழ் பெறாது விரக்தியில் வாழ்ந்தவ்ர் வின்சென்ட் வான் கா.

இவர் நெதர்லாண்டின் ஸன்டெர்ட் என்னும் ஊரில் அன்னா கர்னெலியா கார்பென்டஸ், தியோடரஸ் வான் கா தம்பதியருக்கு 30-03-1853ல் பிறந்தார்.

இவர் சிறிதளவே அடிப்படைக் கல்வி பெற்றவர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

வான் ராபெர்டு, அன்டன் மாவே, பால் காங்குயின் ஆகியோர் இவரது ஒவிய நண்பர்கள்.

வின்சென்ட் வான் காவுக்கு வறுமையினால் வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் துன்பப்பட நேர்ந்தது. இதனால் மனநிலை பாதிப்பும் ஏற்பட்டது.

வண்ண ஒவியங்கள் கிட்டத்தட்ட எண்ணூறும், சித்திரங்கள் வகையில் எழுநூறுக்கும் மேலும் படைத்தவர் வான்கா.

ஆனால் இவைகளில் ஒரே ஒரு வண்ண ஒவியத்தை மட்டுமே தன் வாழ்நாளில் இவரால் விற்க முடிந்தது. வறுமையில் வாடியதுடன் நிறைய படைப்புக்களை உருவாக்கிய படைப்பாளிக்கு இதுதான் கிடைத்த வெகுமதி. வாசிக்கும் நமக்கே பரிதாபம் ஏற்படும்போது அந்த படைப்பாளியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.

இவரது சகோதரரான தியோவின் ஆதரவினாலும் அரவணைப்பினாலும் நிறைய பண உதவிகள் வான்காவுக்குக் கிடைத்து வந்தன. வான்காவின் மீது தியோவுக்கு அளவற்ற அன்பு உண்டு.

இருப்பினும் வின்சென்ட் வான் காவின் வறுமை தீர்ந்த பாடில்லை.

அதிகல் செலவு செய்து வண்ண ஒவியர்கள் பயிலும் வகுப்பில் வான்கா சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

ஒவியங்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தில் வான்கா பயிற்சி பெறுபவராகச் சேர்ந்தார் (1869).

லண்டனில் ஆங்கில மொழியைக் கற்பிக்கும் பணியைச் செய்தார்.

'டார்டுரெச்சட்' என்னுமிடத்தில் இயங்கி வந்த புத்தக விற்பனை நிலையத்தில் ஒவியம் வரையும் பணியைச் செய்து வந்தார் (1877).

பின்னர் பணியாற்றும் ஒவியராக தன் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்தார்.

நெதர்லாண்டின் ஈட்டன் என்னுமிடத்தில் தனக்கு போதனை செய்தவரின் நலனுக்காக நிறைய வண்ன ஒவியங்களைப் படைத்தார்.

இச் சமயத்தில் எண்ணை கலந்த வண்ண ஒவியங்களைப் படைப்பதில் பரிசோதனைகளைச் செய்தார் (1882).

இவர் படைத்த வண்ண ஒவியங்களிலே லாண்டஸ்கேப் வித் சிப்ரஸ் டிரீஸ்; சன்ஃபிளவர் மற்றும் தி யெல்லோ சேர் என்ற மூன்றும் உலகின் மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றன.

வான்காவின் வாழ்க்கை செழிப்பின் சுவடே அறியப்படாமல் நடந்தது. வெறுப்பும், விரக்தியும் தான் மிஞ்சின.

பாரிஸ் நகரில் அருகிலுள்ள 'உவர்-சர் ஆய்ஸ்' என்னும் ஊரில் துப்பாக்கியால் வயிற்றில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இத்துயரச் சம்பவம் நடந்த நாள் 29-07-1890. இறக்கும் போது வின்சென்ட் வான் காவின் வயது முப்பத்து ஏழு.

குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment