Saturday 16 March 2013

22.சத்யேந்த்ர நாத் போஸ் (1894-1974)

இயற்பியல் மற்றும் கணிதத்தில் மிக்கப் புலமையும்,சிறப்பும் பெற்றவர் சத்யேந்த்ர நாத் போஸ். பெருமை மிக்க தேசீய பேராசிரியர் என்னும் அங்கீகாரத்தையும் இவர் பெற்றது சிறப்புச் செய்தியாகும்.

கல்கத்தா நகரில் அமோதினி தேவி,சுரேந்திர நாத் போஸ் தம்பதியருக்கு 01-01-1894 அன்று இவர் பிறந்தார். இவரது மனைவி பெயர் உஷாபதி. திருமணம் நடந்த வருடம் 1914.

அறிவியலை இண்டர்மீடியேட் படிப்பில் மட்டுமன்றி பின்னர் பி.எஸ்.ஸி வகுப்பிலும், எம்.எஸ்.ஸி வகுப்பிலும் படித்த்து மூன்று நிலைகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டங்கள் பெற்றது குறிப்பிடத்தக்க செய்தி (1911-1913-1915).

இவர் முதன்முதலாக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்டார். இப்பதவியில் ஐந்து வருடங்கள் இருந்தார் (1916-21). பின் டாக்கா பல்கலைக்கழகத்தில் மூன்று வருடங்கள் ரீடர் பதவியில் அமர்த்தப்பட்டார் (1921-24).

ரேடியம் மங்கை என அழைக்கப்பட்ட மேடம் க்யூரியிடம் இரண்டு வருடங்கள் பணியாற்றினார் (1925-26).

அறிவியல் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் உதவியாளராகவும் பணியாற்றினார் (1925-26).

இவ்விரண்டு அறிவியல் மேதைகளிடம் பணியாற்றிப் பெற்ற அனுபவங்கள் பின்னாளில் இவருக்கு வாழ்க்கையில் பல உயர்வுகளைப் பெற வழிவகுத்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டாக்கா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக மீண்டும் நியமனம் கிடைத்தது. இப்பதவியில் பத்தொன்பது ஆண்டுகள் பணியாற்றினார் (1926-45).

இண்டியன் சயின்ஸ் காங்கிரசின் தலைவராகவும் இருந்தார் (1944). மீண்டும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 'கெய்ரா' பேராசிரியராக நியமனம் ஆனார் (1945-46).

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸஸ்ஸின் தலைவராகவும் இருந்தார் (1948-50).

ராஜ்யசபாவின் நியமன் உறுப்பினர் ஆனார் (1952-58).

பாரீஸில் நடந்த இண்டர்நேஷனல் கிரிஸ்டல்லோகிராபி கருத்தரங்கில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார் (1954).

கல்கத்தாவின் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அமர்த்தப்பட்டார் (1956-58).

கல்கத்தா பல்கலைக்கழகத்தின் 'எமிரைட்டஸ்' பேராசிரியர் பதவிக்கும் நியமனம் ஆனார் (1957).

வங்கமொழி பேசுபவர்களிடையே சீரிய அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி, வங்க மொழியில் அறிவியல் சஞ்சிகையான 'ஜான் - ஒ - பிஜ்னான்' பதிப்பித்து வெளியிட்டார்.

எண்ணற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகள், அறிவியல் மற்றும் கலாச்சாரம் பற்றிய கட்டுரைகளைப் படைத்து அவ்வப்போது வெளியிட்டார். அறிவியல் புத்தகங்களையும் நிறைய எழுதியவர் இவர்.

இவருக்கு விதவிதமான கைத்தடிகள் மற்றும் வண்ணமிகு தொப்பிகள், கம்பீரம் தரும் உடைகள் இவைகளோடு தோன்றுவதில் நாட்டம் அதிகம்.

மேக்நாத் சாஹா நினைவு தங்கப்பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.

தேசிய விருதான 'பத்ம விபூஷன்' வழங்கப்பட்டது (1954).

லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் இவருக்குக் கிடைத்தது (1958).

'தேசீயப் பேராசிரியர்' என்ற அங்கீகாரம் அரசால் வழங்கப்பட்டது (1958).

கல்கத்தா விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இவருக்கு 'தேஷிகாட்டாமா' என்னும் டிகிரியை வழங்கிக் கெளரவித்தது (1961).

நாட்டிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் கெளரவ டி.எஸ்.ஸி பட்டங்களை வழங்கியுள்ளன.

எண்பது ஆண்டுகள் சிறக்க வாழ்ந்தவர் சத்யேந்த்ர நாத் போஸ், கல்வியும், உழைப்பும், சிறப்புமிக்க அறிவியல் மேதைகளிடம் பெற்ற அனுபவங்களினால் வாழ்க்கையில் பல உயர்வுகளைப் பெற்றவர்.

கல்கத்தா நகரில் 04-02-1974ல் இவர் மரணம் அடைந்தார்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment