-->
டாக்காவுக்கு அருகிலுள்ள செவரடாலி கிராமத்தில் ஜகன்னாத் சாகா, புவனேஸ்வரி தேவி தம்பதியருக்கு 06-10-1893 அன்று இவர் பிறந்தார்.
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.ஸி கணிதம் பட்டம் பெற்றார் (1915).
லண்டனுக்குச் சென்று டி.எஸ்.ஸி பட்டம் பெற்றுத் திரும்பினார் (1919). லண்டன் நகரின் முதல் வகுப்பிலும், பல்கலைக்கழகத்தில் இரண்டாவது நிலையிலும் இப்பட்டத்தைப் பெற்றார்.
வங்கம்,சமஸ்கிருதம்,ஹிந்தி,ஆங்கிலம் தவிர பிரஞ்சு,செர்மானிய மொழிகளில் ஆழ்ந்த அறிவினைப் பெற்றவர். ஆறு மொழிகளைச் சரளமாகப் பேசுவதிலும்,எழுதுவதிலும் திறன் மிக்கவர்.
ராதாராணி என்னும் மாதைத் திருமணம் செய்து கொண்டார் (1918).
கல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அறிவியல் கல்லூரியின் கணிதப் பிரிவில் நியமனம் செய்யப்பட்டார் (1916).
இப்பல்கலைக்கழகம் இவருக்கு குரு பிரசன்ன கோஷ் பெல்லோஷிப் வழங்கியது. அத்துடன் பிரேம்சந்திரா-ராய்சந்திரா உபகார சம்பளச் சலுகையையும் வழங்கியது (1919).
'செலக்டிவ் ரேசியேஷன் பிரஷர் அண்ட் இட்ஸ் அப்ளிகேஷன் டு ஆஸ்ட்ரோ பிஸிக்ஸ்' என்னும் புதிய அறிவியல் கோட்பாட்டை அமைத்தார் (1920).
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கெய்ரோ பேராசிரியராக இயற்பியல் துறைக்கு நியமனம் செய்யப்பட்டார் (1921-23).
பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் பதினைந்து வருடங்கள் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு (1923-38).
இண்டியன் சயின்ஸ் காங்கிரஸ் அசோஷியேசனின் தலைவர் ஆனார் (1925). பம்பாயில் நடந்த இண்டியன் சயின்ஸ் காங்கிரஸுக்கு தலைமை தாங்கினார் (1934).
இண்டியன் சயின்ஸ் நியூஸ் கமிட்டி என்னும் அமைப்பை நிறுவினார். சயின்ஸ் அண்ட் கல்ச்சர் என்னும் ஆங்கில இதழின் ஆசிரியராகி நடத்தினார் (1935).
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸின் தலைவர் ஆனார் (1937).
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மீண்டும் இயற்பியல் துறைக்கு பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இப்பதவியில் பதினான்கு ஆண்டுகள் பணியாற்றிய பெருமை பெற்றார் (1938-52).
யூனிவர்சிட்டி கமிஷனில் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார் (1949).
மக்களவை உறுப்பினர் ஆனார் (1952-56). இக்காலத்திலேயே கல்கத்தா பல்கலைக்கழக இயற்பியல் துறைக்கு 'மெரிடஸ்' பேராசிரியராகப் பணியாற்ற வாய்ப்பும் இவருக்கு வழங்கப்பட்டது.
கல்கத்தாவில் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் நுக்ளீயர் பிஸிக்ஸ்' என்னும் அமைப்பை நிறுவியது மட்டுமன்றி அதன் இயக்குநராகவும் பொறுப்பேற்றார் (1955).
இந்திய அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் மற்றும் கமிஷன்களில் இவர் அங்கம் வகித்தார். இதன் மூலமாக உலகின் பல நாடுகளில் நடத்தப்படும் மாநாடுகள் கருத்தரங்குகள் மற்றும் விழாக்களில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.
எண்ணற்ற அறிவியல் நூல்களை எழுதியவர் இவர். எ டிரிடீஸ் ஆன் தி தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி; எ டிரிடீஸ் ஆன் தி மாடர்ன் பிஸிக்ஸ்; மை எக்ஸ்பீரியன்ஸ் இன் ரஷ்யா என்ற புத்தகங்கள் உலக அளவில் இவரது சிறந்த புத்தகங்களாகக் கருதப்படுகின்றன.
இவருக்கு கிரிஃபித் நினைவுப்பரிசு (1919); லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் (1927); பெங்கால் ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் (1930) களும் கிடைத்தன.
கார்னகி டிராவலிங் பெல்லோஷிப் இவருக்கு வழங்கப்பட்டது (1936ஸ்). இதைப் பெற்று அமெரிக்கா,பிரான்ஸ் தேசங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.
அமெரிக்காவில் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸஸ்ஸின் ஃபெல்லோஷிப் இவருக்குக் கிடைத்தது. மேலும் அஸ்டராநாமிக்கல் சொசைட்டீஸ் ஆஃப் அமெரிக்கா அண்ட் பிரான்ஸ் என்ற அமைப்பின் ஃபெல்லோஷிப்பும் கிடைத்தது. இவைகளின் உதவியோடு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின் பல பகுதிகளில் இவர் அறிவியல் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
மேக்நாத் சாஹா தனது அறுபத்து மூன்றாம் வயதில் டெல்லியில் 16-02-1956 அன்று காலமானார்.
குரு ராதாகிருஷ்ணன்
உலக அளவில் இந்திய நாட்டின் பெருமை மற்றும் புகழை உயர்த்திய பங்கு பலருக்கு உண்டு.
அத்தகையோரில் அறிவியலாளர் மேக்நாத் சாஹாவும் ஒருவர்.
டாக்காவுக்கு அருகிலுள்ள செவரடாலி கிராமத்தில் ஜகன்னாத் சாகா, புவனேஸ்வரி தேவி தம்பதியருக்கு 06-10-1893 அன்று இவர் பிறந்தார்.
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.ஸி கணிதம் பட்டம் பெற்றார் (1915).
லண்டனுக்குச் சென்று டி.எஸ்.ஸி பட்டம் பெற்றுத் திரும்பினார் (1919). லண்டன் நகரின் முதல் வகுப்பிலும், பல்கலைக்கழகத்தில் இரண்டாவது நிலையிலும் இப்பட்டத்தைப் பெற்றார்.
வங்கம்,சமஸ்கிருதம்,ஹிந்தி,ஆங்கிலம் தவிர பிரஞ்சு,செர்மானிய மொழிகளில் ஆழ்ந்த அறிவினைப் பெற்றவர். ஆறு மொழிகளைச் சரளமாகப் பேசுவதிலும்,எழுதுவதிலும் திறன் மிக்கவர்.
ராதாராணி என்னும் மாதைத் திருமணம் செய்து கொண்டார் (1918).
கல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அறிவியல் கல்லூரியின் கணிதப் பிரிவில் நியமனம் செய்யப்பட்டார் (1916).
இப்பல்கலைக்கழகம் இவருக்கு குரு பிரசன்ன கோஷ் பெல்லோஷிப் வழங்கியது. அத்துடன் பிரேம்சந்திரா-ராய்சந்திரா உபகார சம்பளச் சலுகையையும் வழங்கியது (1919).
'செலக்டிவ் ரேசியேஷன் பிரஷர் அண்ட் இட்ஸ் அப்ளிகேஷன் டு ஆஸ்ட்ரோ பிஸிக்ஸ்' என்னும் புதிய அறிவியல் கோட்பாட்டை அமைத்தார் (1920).
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கெய்ரோ பேராசிரியராக இயற்பியல் துறைக்கு நியமனம் செய்யப்பட்டார் (1921-23).
பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் பதினைந்து வருடங்கள் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு (1923-38).
இண்டியன் சயின்ஸ் காங்கிரஸ் அசோஷியேசனின் தலைவர் ஆனார் (1925). பம்பாயில் நடந்த இண்டியன் சயின்ஸ் காங்கிரஸுக்கு தலைமை தாங்கினார் (1934).
இண்டியன் சயின்ஸ் நியூஸ் கமிட்டி என்னும் அமைப்பை நிறுவினார். சயின்ஸ் அண்ட் கல்ச்சர் என்னும் ஆங்கில இதழின் ஆசிரியராகி நடத்தினார் (1935).
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸின் தலைவர் ஆனார் (1937).
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மீண்டும் இயற்பியல் துறைக்கு பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இப்பதவியில் பதினான்கு ஆண்டுகள் பணியாற்றிய பெருமை பெற்றார் (1938-52).
யூனிவர்சிட்டி கமிஷனில் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார் (1949).
மக்களவை உறுப்பினர் ஆனார் (1952-56). இக்காலத்திலேயே கல்கத்தா பல்கலைக்கழக இயற்பியல் துறைக்கு 'மெரிடஸ்' பேராசிரியராகப் பணியாற்ற வாய்ப்பும் இவருக்கு வழங்கப்பட்டது.
கல்கத்தாவில் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் நுக்ளீயர் பிஸிக்ஸ்' என்னும் அமைப்பை நிறுவியது மட்டுமன்றி அதன் இயக்குநராகவும் பொறுப்பேற்றார் (1955).
இந்திய அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் மற்றும் கமிஷன்களில் இவர் அங்கம் வகித்தார். இதன் மூலமாக உலகின் பல நாடுகளில் நடத்தப்படும் மாநாடுகள் கருத்தரங்குகள் மற்றும் விழாக்களில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.
எண்ணற்ற அறிவியல் நூல்களை எழுதியவர் இவர். எ டிரிடீஸ் ஆன் தி தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி; எ டிரிடீஸ் ஆன் தி மாடர்ன் பிஸிக்ஸ்; மை எக்ஸ்பீரியன்ஸ் இன் ரஷ்யா என்ற புத்தகங்கள் உலக அளவில் இவரது சிறந்த புத்தகங்களாகக் கருதப்படுகின்றன.
இவருக்கு கிரிஃபித் நினைவுப்பரிசு (1919); லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் (1927); பெங்கால் ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் (1930) களும் கிடைத்தன.
கார்னகி டிராவலிங் பெல்லோஷிப் இவருக்கு வழங்கப்பட்டது (1936ஸ்). இதைப் பெற்று அமெரிக்கா,பிரான்ஸ் தேசங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.
அமெரிக்காவில் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸஸ்ஸின் ஃபெல்லோஷிப் இவருக்குக் கிடைத்தது. மேலும் அஸ்டராநாமிக்கல் சொசைட்டீஸ் ஆஃப் அமெரிக்கா அண்ட் பிரான்ஸ் என்ற அமைப்பின் ஃபெல்லோஷிப்பும் கிடைத்தது. இவைகளின் உதவியோடு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின் பல பகுதிகளில் இவர் அறிவியல் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
மேக்நாத் சாஹா தனது அறுபத்து மூன்றாம் வயதில் டெல்லியில் 16-02-1956 அன்று காலமானார்.
குரு ராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment