Saturday 15 December 2012

9. லூயிஸ் பாஸ்டர் (1822-1895)


அறிவியலின் வாயிலாக நமக்கு சேவை செய்தவர்களில் ஒருவர் லூயிஸ் பாஸ்டர் .

பிரான்சிலுள்ள 'டோல்' என்ற ஊரில் 'ஜீன் எட்டியனட்டி ரோக்கி', 'ஜீன் ஜோசப் பாஸ்டர்' என்னும் தம்பதியருக்கு 27-12-1822ல் இவர் பிறந்தார்.

பி.ஏ.பட்டம் (1840); பி.எஸ்.ஸி (1842); எம்.எஸ்.ஸி (1845) பட்டங்களைப் பெற்றவர். முனைவர் பட்டம் பெற வேண்டி இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சேர்த்து சமர்பித்தார். 

ஒரு கட்டுரையே போதும். ஆனாலும் இவரது ஆய்வுகளின் திறன் இத்தகைய தகுதிகளை அளித்துள்ளன என்பது சிறப்புச் செய்தியாகும்.

'மேரி லாரென்ட்' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார் (1849)

'டிஜோன்' கல்லூரியின் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 'டார்டரிக்' திரவம் பற்றிய இவரது ஆராய்ச்சி தான் பேராசிரியர் பதவி கிடைக்க வழி அமைத்துக் கொடுத்தது (1848)

'ஸ்ட்ராஸ்போர்க்' கல்லூரி இவரை வேதியியல் பேராசிரியர் பதவியில் அமருவதற்க்குக் கேட்டுக் கொண்டது (1849)

'லில்லி' பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறைக்கு 'டீன்' ஆக நியமனம் செய்யப்பட்டார் (1854). இவரது அறிவியல் மற்றும் ஆராய்சிகளின் திறன்களே இப்பதவியை அளித்தன என்றால் மிகையில்லை.

'ஈகோல் நார்மேல் சுப்பிரியோர்'ல் அறிவியல் படிப்புப் பிரிவுக்கு இயக்குநராகப் பொறுப்பேற்றார் (1857).

நோய் தன்மைகள் மற்றும் அந்த நோய்க் கிருமிகளுக்கும் உள்ள பந்தத்தை முதன்முதலாக லூயிஸ் பாஸ்டர் அறிவித்தார் (1881). பல்வகை நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வழி வகைகளையும் கண்டுபிடித்தார். இவ்வித ஆராய்ச்சிகள் மூலம் நோய்க் கிருமிகளைப் பதப்படுத்தும் முறைகளை அறிமுகம் செய்தார்.

விலங்கினங்களில் பாதிக்கும் வெறி நோய்கள் - சிறப்பாக நாய்களைப் பாதிக்கின்ற வெறி நோய்க்குச் சக்தி வாய்ந்த தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார் (1885)

மருத்துவ உலகில் பாஸ்டரின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரும் பெருமைகளைச் சேர்த்தன. இதனைச் சிறப்பிக்கவே பாரீஸ நகரில் 'பாஸ்டர் இன்ஸடிடியூட்' -டை நிறுவினார். மேலும் நிறுவனத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் (1888)

அறுவைச் சிக்கிசையின் போது கிருமிகளை அழிக்கும் வழி வகைகளைக் கண்டுபிடித்தார். மேலும் 'பாஸடர் எஃபெக்ட்'டை பயன்படுத்தும் போது வேதியியல் மாற்றங்கள் தோன்றும். இதன் காரணங்களை எடுத்துக் கூறும் வகைகள் பற்றி ஆராய்ச்சிகளையும் செய்தார்.

இவருக்கு சிறிதளவான பக்கவாத நோய் ஏற்பட்டது. இருப்பினும் தன் ஆராய்சசிகளில் எவ்விதத் தடைகளும் இந்நோயினால் ஏற்படாமல் கவனித்துத் தொடர்ந்து செய்தது இவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு (1868)

'மைக்ரோ - ஆர்கானிஸம்' என்ற பிரிவின் கீழ் பாஸ்டரின் ஆழமான படிப்பைச் சிறப்புச் செய்ய, 'பான் பல்கலைக்கழகம்' இவருக்கு ' டாக்டர் ஆஃப் மெடிசன்' என்னும் கெளரவப் பட்டத்தை அளித்தது.

தமிழ்நாட்டின் குன்னூரில் 'பாஸ்டர் இன்ஸடிடியூட்' ஒன்று நிறுவப்பட்டு நெடுங்காலமாக இயங்கி வருகிறது. வெறிநாய்கடி மருந்து தயாரிக்கப்பட்டு இங்கிருந்து மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது.

பாரீஸ் நகருக்கு அருகிலிருக்கும் 'செயின்ட் கிளெவ்டு' என்னும் நகரில், தன் எழுபத்து மூன்றாம் வயதில், 28-09-1895 அன்று காலமானார்.

விரைவில் மரணம் சம்பவிக்கும் வெறிநாய்க்கடிக்கு பாஸ்டரின் மருந்து நமக்குப் பெரிதும் பயன்பட்டு வருவதை இலகுவில் மறந்துவிட இயலாது.


குரு ராதாகிருஷ்ணன்

1 comment:

  1. Sir I ask one question to you.
    What is Death bed words of louis pauester.

    ReplyDelete