Monday 17 September 2012

ஒழுக்கமான வாழ்க்கை



ஒழுக்கம் மேன்மை தருவதால் அது உயிரை விட முக்கியம்.

ஒழுக்கக் குறைவால் ஏற்படும் தீமைகள் தெரிந்தவர்கள் ஒழுக்கம் தவற மாட்டார்கள்.

இவைகள் திருவள்ளுவரால் சொல்லப்பட்ட நியதிகள்.

ஒழுக்கமற்ற வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் இக்காலத்தில் சரியான தன்டனையை அனுபவிக்கின்றனர்

சட்டம் அவர்களைத் தண்டிக்கவில்லை. இயற்கையே அத்தகையோருக்கு தன்டனை வழங்குகிறது.

'எய்ட்ஸ்' ஆம்! இதுவே ஒழுக்க மற்றவர்களுக்கு வரும் உயிர் கொல்லி நோயாகும்.

போதை ஊசி உபயோகிப்பவர்கள், பால்வினை நோய் உள்ளவர்கள் எச்.ஐ.வி.யைப் பெற அதிக வாய்ப்புள்ளவர்கள்.

எய்ட்ஸ வந்தவுடன் இறந்து விடுகின்றனர் என்ற நிலை மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. எச்.ஐ.வி. தொற்றிய பிறகு பத்து, பன்னிரெண்டு வருடங்கள் வாழ்ந்து வருபவர்கள் இருக்கிறார்கள்.

பதினைந்து ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் இரண்டு புதிய எய்ட்ஸ மருந்துகளுக்கு ' ஐரோப்பிய ஆணையம்' விற்பனை அனுமதி வழங்கி இருக்கிறது. மெர்க் & கோ நிறுவனத்தின் 'க்ரிக்ஸிவான்' மற்றும் ரோஷ் ஹோல்டிங் ஏ.ஜி. நிறுவனத்தின் 'இன்விரேஸ்' ஆகியவை தான் அந்த இரண்டு புதிய மருந்துகள்.

இவை இரண்டும் எய்ட்ஸை எதிர்க்கப் புதிய வாய்ப்பினை அளித்துள்ளன என்கிறார் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் பிரதிநிதியான ஜோச்சென் குபோஷ்.

ஏற்கனவே அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்த மருந்துகள் ' ப்ரோடிய ஸ் இன்ஹிபிட்டர்' என்ற புதுரகத்தைச் சேர்ந்தவை. இவற்றை நியூக்ளியோசைட் ரிவர்ஸ் ட்ரான்ஸ்க்ரிப்டேஸ் இன்ஹிபிட்டர்ஸ் (NUCLEOSIDE REVERSE TRANSCRIPTASE INHIBITORS) என்ற ரக மருந்துகளுடன் சேர்ந்து உட்கொள்வார்கள்.

1997 ஆம் வருடம் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரையிலான காலத்தில் 29,71,825 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டன. அவைகளில் உறுதி செய்யப்பட்ட பாஸிட்டிவ் சாம்பிள்கள் 52,802; எய்ட்ஸ் நபர்கள் 3,386 என்று கண்டறியப்பட்டுள்ளன. ஹெச்.ஐ.வி.பாஸிட்டிவ் விகிதம் ஆயிரத்துக்கு 17.8 சதவீதம். தேசீய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பினால் (NACO) சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தான் இவை. இவைகள் இந்திய நிலவரம் மட்டுமே.

'எய்ட்ஸ்'ஐப் பற்றி இவ்வளவு தெரிந்தாலும் நம்மில் பலர் சபலங்களுக்கு ஆட்படுகின்றனர்.

பிறன் மனைவியை விரும்பும் மடத்தனம் தேர்ந்த அறிவுள்ளவர்களிடம் இருக்காது என்பதை ' பிறன் பொருளால் பொட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல்' என்ற குறள் மூலம் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இதை மனதில் எண்ணி பிற பெண்களை அனுபவிப்பவர் சமூகத்துக்கும் , சமுதாயத்துக்கும் பெரும் தீங்கு இழைப்பவரே ஆவர்.

பிற பெண்களை நாடாதவன் நல்ல இல்வாழ்க்கை வாழ்பவனாகிறான்.

கம்பராமாயணம் படித்தவர்கள், கேட்டவர்கள் நிறைய உண்டு.

தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள். அவர் மகன் ராமனுக்கு ஒருத்தி தான் மனைவியானாள்.

கற்பனை செய்யும் போது தத்துவங்கள் பல புரியும்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதையே இதிகாசங்களும், இலக்கியங்களும் போதிக்கின்றன. இவைகளை என்ணிப் பாராமல் பெண்களை சில நிமிட மகிழ்ச்சிக்காக உடலுறவு கொள்வது வெறுக்கத்தக்கது.

அவர்கள் எச்.ஐ.வி கிருமிகளைச் சுமந்து கொண்டு வந்து வீட்டில் மனைவிக்குத் தானமாக, சீதனமாகத் தருகின்றனர். அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கும் இந்த உயிர்க் கொல்லி நோய் வருகிறது.

குடும்பமே அழியும் நிலை நேருகிறது. முன்பு கூறப்பட்டுள்ள மாத்திரைகள் மேலை நாடுகளிலிருந்து பெறுவதற்கு எவ்வளவு பணம் வேண்டும் ?

இவைகள் யோசிப்பவர்கள் ஒழுக்கம் தவற மாட்டார்கள்.

ஒழுக்க சீலர்களாக வாழ வேண்டும். நமது குடும்பம் தளைத்து வாழையடி வாழையாகப் பெருக வேண்டும் என்றால், பிற பெண்களின் சவகாசங்கள் தேவை இல்லை.

ஒழுக்கமான வாழ்க்கையைக் கொண்டிருப்பவர்கள் உயர்ந்தோர்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment