Thursday 22 March 2012

நினைப்புகள் தவறானவை



சமுதாயத்தில் தற்புகழ்ச்சியும்,முகமன்களும் இன்று தாராளமாகப் பரவிவருகின்றன.

தன்னைத் தானே புகழ்வது தற்புகழ்ச்சியாகும். மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும். இது தற்காலிக மக்ழ்ச்சியே.

மற்றவர்களிடம் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்ற எண்ணம் தவறு என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் பெறும் நன்மதிப்பு எவ்வாறு வருகிறது என்பது தான் முக்கியம். தன் காரியம் வெற்றி பெற வேண்டும் என்ற சுயநலத்தால் மற்றவரை வானளாவப் புகழ்வதற்குப் பெயரே முகமன்.

இதற்கு வசப்படாதவர்கள் சிலரே. மற்றவரின் முகமன் நம்மைப் பயன்படுத்த விழையும் சாதுரியமே என்பதை அறிந்தவர்களிடம் ஒன்றும் நடக்காது.

தற்புகழ்ச்சி தற்காலிகமானது என்றால் முகமன் அதை விட கீழானது என்பதை அறிந்தவர்கள் நிறைய உண்டு.

சூழ்நிலைகளை அறிந்து பேசாது இருந்து விடுவதை தப்புக் கணக்கில் சேர்ப்பவர்கள் பலர் உண்டு.

இரண்டுமே சுயநலத்தின் பெற்றோர்களே.

இன்றைய அரசியலில் , இவைகள் பல்கிப் பெருகி ஆல் போல் தழைத்து வருவதை நாம் அறிவோம்.

போலியான ஆர்ப்பாட்டங்கள், பலன் கருதி செய்யப்படும் உதவிகள் நடவடிக்கைகள் மூலம் அப்பட்டமாகத் தெரிந்து விடும்.

அலுவலங்கள், நிறுவனங்களில் இவைகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் , வெளிச்சத்துக்குக் கொணரும் போது வெறுமையாகக் காட்சி தரும்.

அந்தரங்கச் சுத்தியுடன் நமக்கு மட்டுமன்றி, மற்றவர்களுக்கும் காரியத்தை முடிந்த வரை செய்து கொடுத்தாலே போதும் நம் மதிப்புகள் உயர்ந்து விடும்.

குருஷேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு கண்ணன் ' பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்' என்று உபதேசம் செய்தார் என்பதையும் இவ்வேளையில் நினைத்தாலே போதும் தெளிவு பிறந்துவிடும்.



குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment