Tuesday 6 March 2012

பிறரை நம்புவதில் கவனம்




சாதுரியப் பேச்சையும் , தோற்றத்தையும் வைத்து முன்பின் தெரியாதவர்களை நம்ப வேண்டாம்.

தோற்றத்தினால் பெரிய மனிதராகவும், பேச்சால் செல்வாக்கு மிக்கவராகவும் தெரிவதைக் கண்டு உணர வேண்டும்.

போன வாரம் என்னைத் தேடி ஒரு பையன் வந்தான். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்திலிருந்து வந்திருந்த நேர்காணல் கடிதத்தையும் கொடுத்தான். சென்னைக்கு அவனுடன் சென்று காரியத்தைக் கச்சிதமாக முடித்துத் தந்தேன். பணம் அதிகம் செலவாகவில்லை. ஏதோ என்னால் ஆன உதவி என்று ஒருவர் சொன்னார்.

அந்தப் பையனைச் சந்திக்க முடிந்து சென்னைப் பயணம் குறித்துக் கேட்டால் தான் தெரியும் . பணம் தண்ணீர் போல் செலவழித்தும் காரியம் இனிமேல் தான் தெரியவரும் என்ற செய்தி கேட்கலாம்.

இத்தகைய நிகழ்வு நிறையப் பாடங்களைக் கற்றுத் தருகின்றன.

புதியவரிகளிடம் பழகுவதில் நிதானமும், கவனமும் தேவை.

அறிந்த நபர்களைப் பற்றிக் குறைவாகத் தெரிந்திருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும் .

மிகவும் தெரிந்து கொண்டுள்ள நபர்களிடம் பொறுப்புக்களை நம்பி ஒப்படைக்கலாம். தெரிந்த நபர் வேறு ஒருவரை வைத்து காரியத்தை முடிக்கலாம். அவரைச் சந்திப்போம் என்று ஆலோசனை கூறும் போது கவனமாகச் செயல்பட வேண்டும்.

நமக்கு வேண்டியவர்களிடம் காரியங்களை ஒப்படைத்தால் மட்டும் போதாது.

அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

நண்பர் தானே, நன்றாகத் தெரிந்தவர் தானே என எண்ணி விஷயத்தை ஆறப் போட்டு விடலாம். கால தாமதத்தால் காரியங்கள் முடியாமலேயே போய்விடும் வாய்ப்புகள் உண்டு.

வேண்டியவர்களிடம் அடிக்கடி சென்று நினைவூட்டினால் , நச்சரிக்கிறாரே என்று எரிச்சல் உண்டாகும் என்று நினைக்கிறீர்கள்.

காரியம் முடியும் வரை, சந்தித்து நினைவூட்டி சாதித்துக் கொள்வதில் தான், திறமையானவர் என்ற பெயரை அடைய முடியும்.

நம்பிக்கை சில நேரங்களில் தான் பயன்படும். பல நேரங்களில் விடாமுயற்சிகள் தான் வெற்றியைத் தருகின்றன .



குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment