Wednesday 7 December 2011

உள் மனம் சொல்கிறது


தன்னிச்சையாக இயங்கும் உள் மனம் எல்லோருக்கும் உண்டு .

அதன் போக்கில் செல்பவருக்கு வாழ்க்கையில் நன்மை பல நடக்கும் .

வாய்ப்புகள் ஒவ்வொருவரிடமும் வந்து போகின்றன . அதை வரவேற்றுப் பயன்படுத்திக் கொள்பவர் சிலரே.

வாய்ப்புகளைத் தவற விடுபவர்கள் வாழ்க்கையில் உயருவது இல்லை .
அதைத் தேடி அலைபவர்களுக்கு நிறைய நன்மைகளைத் தருகின்றன . காசு பணம் ஏதும் செலவழிக்க வேண்டியது இல்லை .

இனிய முகத்துடன் மற்றவர்களோடு அன்பாகப் பேசிப் பாருங்கள் . அவர்களில் ஒருவர் உங்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவார்.

இவ்வாறு பேசும் சூழலில் , உள் மனம் குரல் கொடுக்கும் . மற்றவர்கள் தெரிவு செய்யும் பாதையில் போக வேண்டாம் என்றும் துணிந்து செல்லலாம் என்று தைரியம் கொடுப்பது உள் மனம் தான் .

உள் மன உணர்வுகளுக்கு மதிப்புத் தந்து நடந்து கொள்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வுகள் அதுவாகவே வந்து சேரும்.

மனதுக்குள் நடக்கின்ற மகத்தான சக்திகளுள் இதுவும் ஒன்று என்பது மனோதத்துவ வல்லுநர்களின் ஆராய்ந்த முடிவுகளாகும்.

நான் நிறையப் படித்திருக்கின்றேன் . விளையாட்டுகளில் பெற்ற பரிசுகள் அநேகம்.  பேச்சுப் போட்டிகளில் முதற் பரிசுகள் பெறுவதே வாடிக்கை . கர்வத்தைக் கொடுக்கும் இந்த எண்ணங்கள் சரியல்ல . வாய்ப்புகள் நம்மைத் தேடி வரட்டும் என்ற மிதப்புடன் இவர்கள் செயல்படுவார்கள் .

இவர்களுக்கும் வாய்ப்புகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும் .

கர்வம் கொண்டவர்களிடம் பணிவு இருக்காது . மற்றவர்களை உதாசீனப்படுத்துவார்கள் . நம்மை விட இவர் திறமை குறைவானவர் என்ற எண்ணம் எப்போதும் மனதில் குடி கொண்டிருக்கும் .

ஆகவே இவர்களுக்கு நண்பர்கள் குறைவு . மற்றவர்களோடு சமமாகப் பழகிப் பேசுபவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும் . காரணம் நண்பனின் திறமையை மற்றவர்களிடம் சொல்லி வாய்ப்பு கேட்பவர்கள் நிறைய உண்டு . நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்கள் .

உள் மனம் , வரும் வாய்ப்பை ஏற்றுக் கொள்ள ஆலோசனைகளை நிச்சயம் வழங்கும் .

அதைக் கேட்டுப் பயன் பெறுங்கள். விழிப்புணர்வோடு திறமைசாலிகளோ, சாதாரண நிலையில் உள்ளவரோ மற்றவர்களுடன் பழகி வாய்ப்புகளை ஏற்று வாழ்க்கையில் உயருங்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment