Wednesday 23 November 2011

நல்ல அபிப்பிராயம் ஏற்பட வேண்டுமா



மற்றவர்களின் அன்பைப் பெறவும் , நம் மீது அவர்கள் நல்ல அபிப்பிராயம் கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

நண்பரின் வீட்டுக்குப் போகின்ற வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது . நண்பருக்கு நிறைய குழந்தைகள் . இவைகளைத் தெரிந்து கொண்டு, குழந்தைகளுக்குப் பிரியமான பழங்கள், பிஸ்கட்டுகள் வாங்கிப் போவது நல்லது .

இனிப்புப் பதார்த்தங்களில் நாள்கள் பல சென்றவை , மிட்டாய் வகைகளில் தேங்கிப் போனவைகளை வாங்கிச் செல்வதை தவிர்க்க வேண்டும் . அவைகள் சிறு குழந்தைகளின் உடல் நலங்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் .

மனைவி சிநேகிதியின் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறார். அவரைப் போகவிடுங்கள்அந்த வீட்டில் நிறையப் பெண் பிள்ளைகள் இருப்பதாக அறிகிறீர்கள் . மனைவியிடம் போகும் போது வீட்டுக்குத் தேவைப்படும் காய்கறிகளை வாங்கி அனுப்பி வையுங்கள் .

பிறர் வீட்டுக்குச் செல்வதில் நிறையப் பணம் தேவை என்று நினைத்து வாய்ப்பைத் தவற விடாதீர்கள் . நம் சக்திக்குத் தகுந்தாற் போல் திண்பண்டங்கள் , பூ, பழங்கள் முதலியவற்றை வாங்கிச் செல்லலாம் .

இதனால் என்ன லாபம் கிடைக்கும் என்று கணக்குப் பார்க்காதீர்கள் . ஏனெனில் நம் குடும்பத்துக்கு மற்றவர்களின் நட்பும் , பரிவும் நிச்சயம் கிடைக்கும் .
கணக்குப் பார்த்து மற்றவர்களிடம் பழகினால் நம் மீது தவறான அபிப்பிராயங்கள் தான் ஏற்படும் .

செலவில்லாத வகையில் மற்றவர்களின் பழக்கம் தேவை என நினைத்தால் வெறுமை தான் மிஞ்சும் .

ஒரு கிராமத்தில் பெரிய தனக்காரர் இருந்தார் . கிராம மக்கள் அவருக்கு மரியாதையை அளவுக்கு மீறி தருவது உண்டு. காரணம் அவரிடம் பணம் பெறாதவர்கள் அக்கிராமத்தில் இல்லை . தருமமாக அல்ல வட்டிக்குத் தான் பணம் கொடுப்பது அவர் வழக்கம் .

மற்றவர்கள் வீட்டில் நடக்கும் சுப மற்றும் அகப காரியங்களுக்கு தன் கைத்தடியை ஆள் மூலம் அவ்வீட்டுக்கு அனுப்பி , எல்லோரது பார்வையில் படும்படியான இடத்தில் வைக்கச் சொல்வார்கள் .

பெரிய தனக்காரர் மரணம் எய்தி விட்டார் . கிராம மக்களுக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது . துக்கத்தில் கலந்து கொள்ள கிராம மக்கள் ஒருவருமே செல்லவில்லை .

ஆனால் கைத்தடிகள், குடைகள் , துண்டுகளே வீட்டின் தாழ்வாரத்தில் வைக்கப்பட்டு காட்சிப் பொருளாக இருந்தன .

கதையானாலும் , முக்கிய விஷயத்தை வலியுறுத்துகிறது .

மற்றவர்களிடம் மனம் விட்டுப் பழகுவோம் . நல்ல அபிப்பிராயங்கள் நம் மீது வந்து விழும் .

 குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment