Saturday 17 December 2011

காலம் தவறாமை வேண்டும்



காலம் தவறாமையை வாழ்வில் கடைப்பிடித்தவர்கள் எல்லா நன்மைகளையும் கூடிப் பெறுவர்.

நண்பரை வீட்டுக்கு அழைத்துப் பேசி முடிவு செய்ய முதல் நாள் செய்தி சொல்லப்பட்டது . அவருக்காக காத்திருக்கிறார் . கால் மணி நேரம் கடந்து விட்டது
 அரை மணி நேரமும் சென்றது . நண்பர் வரவில்லை .
அவர் வரும் வழியில் ஏதாவது நடந்து விட்டதா ? சொன்ன நேரத்தில் வருபவராயிற்றே ! ஒரு வேளை உடல் நலக் குறைவு வந்திருக்குமோ ! காத்திருப்பவரின் மனதில் எண்ணங்கள் தொடராக வலம் வருகின்றன .

வரச் சொன்ன நண்பரிடம் முக்கிய விஷயத்தைப் பேசி முடிக்க வேண்டும் . பின் வேறு ஒரு நபரை அது விஷயமாகப் பார்க்க வேண்டும் என்ற திட்டம் நிறைவேறாது போகுமோ என் மனக்கிலேசம் வேறு .

காரணம் திருமணப் பேச்சு தான் . நண்பரது மகனுக்கு தன் மகளை மணம் முடிக்க எண்ணுபவருக்கு இவ்வாறு தானே மனம் குழம்பும் .

நமக்காகக் காத்திருப்பாரே . விரைவாகச் சென்று என்ன செய்தி என்பதை அறிய வேண்டாமோ . அரை மணி நேரம் கடந்து விட்டதால் , நான் போய் அவர் வெளியில் சென்று விட்டால் ஏமாற்றம் தானே மிஞ்சும் .

சரி , போய்த் தான் பார்ப்போம் . இருந்தால் வேறு வகையில் அவரைச் சமாதானம் சொல்லி விடுவோம் என எண்ணுகிற நண்பர் . இருவரையும் இடம் மாற்றிப் போட்டு எண்ணிப் பாருங்கள் .

முக்கியமான அல்லது சாதாரண விஷயமாக இருப்பினும் காலம் தவறாமல் செய்து பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

நாம் செய்யும் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து பழகிக் கொண்டால் நன்மை பயக்கும் .

வேலைகளை முடிப்பதற்கு , போக வேண்டிய இடம் , பேருந்து அல்லது மின்சார ரயில் பயணம் , இவைகளுக்கென்று எவ்வளவு நேரம் செலவழியும் என்பதை திட்டமிட வேண்டும் . அப்போது தான் நாம் காணப்போகும் நண்பரைக் காலம் தவறாமல் சந்தித்துப் பேச முடியும் . நன்மையும் பெற முடியும் .

வேலைக்கான நேர்காணல் கடிதம் பெற்றவர் , வெளியூர் பயணத்துக்கான பயணசீட்டைப் பெற்றவர் , இதைப் போன்றவைகளுக்கு ஆட்பட்டவர்கள் காலம் தவறாமையைக் கடைப்பிடிக்காது போனால் என்ன ஆகும் . கற்பனை செய்து பாருங்கள் .

பல நல்ல விஷயங்கள் கை நழுவிப் போய் விடும் .

மற்றவர்களின் மதிப்பீடுகள் நம்மைத் தலைகுனியச் செய்து விடும் .

எல்லா காரியங்களையும் திட்டமிட்டுக் காலம் தவறாது செய்து பழக்கப்பட்டவர்கள் , எனக்கு நேரமே இல்லை என்ற பொய்யைக் கூற மாட்டார்கள்

தெரிந்தே பொய் சொல்பவர்கள் வாழ்க்கையில் உயர மாட்டார்கள் .


குரு
ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment