Saturday 23 February 2013

19. அலெக்ஸாண்டர் ஃபிளமிங் ( 1881-1955)

அலெக்ஸாண்டர் ஃபிளமிங் என்னும் மருத்துவர் தன் அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் 'பென்சிலின்' மருந்தைக் கண்டுபிடித்து உலகப் புகழ் பெற்றார். பால்வினை நோயான சிபிலிஸுக்கும் மருந்து கண்டுபிடித்தவரும் இவர் தான். இவர் ஸ்காட்லாந்தின் லாச்ஃபீல்டு என்ற நகரில் ஹூக் ஃபிளமிங்- கிரேஸ் மார்ட்டன் தம்பதியருக்கு 06-08-1881ல் பிறந்தார்.

ஆரம்பத்தில் கப்பல் கம்பெனியில் பணிபுரிந்தார். பின்பு பணியிலிருந்து விலகி லண்டன் சென்றார். அங்குள்ள செயின்ட் மேரீஸ ஹாஸ்பிடல் மெடிக்கல் ஸ்கூலில் படித்து மருந்தியலில் பட்டம் பெற்றார் (1906). மூன்று வருடங்கள் கழித்து எஃப்.ஆர்.சி.எஸ் பட்டமும் பெற்றார் (1909). 'அக்னே வல்காரிஸ்' என்னும் நோயின் சிகிச்சைக்குத் தேவையான வாக்ஸினைத் தன் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்தார்.

மேலும் பால்வினை நோயான 'ஸ்பிலிஸ்'ஸைக் கண்டறிய இலகுவான முறையில் 'சீரம்' தயாரிப்பு முறைகளையும் தன் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்தார். செயிண்ட் மேரீஸ் ஹாஸ்பிட்டலில் மெடிகல் கார்ப்ஸ் குழுவில் மீண்டும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்வதற்க்குத் தன்னை இணைத்துக் கொண்டார் (1918).

'லைஸோஸைம்' என்ற மருந்து நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது என்பதைக் கண்டுபிடித்து பகுப்பாய்வுகளையும் செய்து காட்டினார் (1921). லண்டன் பல்கலைக்கழகத்தில் பாக்டீரியாலஜி பேராசிரியராக நியமனம் கிடைக்கப் பெற்றார் (1928). பென்சிலின் மருந்தைக் கண்டுபிடித்தது மட்டுமின்றி அப்பெயரைச் சூட்டியதும் அலெக்ஸாண்டர் ஃபிளமிங் தான் . லண்டனிலுள்ள புகழ்பெற்ற ராயல் சொஸைட்டியின் ஃபெல்லோஷிப் இவருக்குக் கிடைத்தது (1943).

இவருக்கு உலகப் புகழ் வாய்ந்த நோபில் பரிசு 1945ல் வழங்கப்பட்டது. இப்பரிசு பிஸியாலஜி மற்றும் மெடிசன் பிரிவிற்கு ஈபி செய்ன், எச்.டபிள்யூ.ப்ளோரி என்ற இருவருடன், அலெக்ஸாண்டர் ஃபிளமிங்குக்கும் சேர்த்து வழங்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.

மனித இனம் நோயின் பிடிகளிலிருந்து விடுபட, தன்னால் ஆன முயற்சிகளை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்துக் காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு. தனது எழுபத்து நான்காம் வயதில், லண்டன் மாநகரில் 11-03-1955 அன்று மரணம் அடைந்தார்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment