Saturday 16 February 2013

18. ஆல்பர்ட் ஐன்ஸடீன் ( 1879-1955)

அறிவியலாரின் கண்டுபிடிப்புகளிலேயே முக்கியமாகக் கருதப்படுவது காலம் - இடம் - பொதுத் தொடர்புத் தத்துவம் தான். இவைகளைக் தன் லட்சியமாகக் கொண்டு ஆராய்ச்சிகள் பல செய்து உலகுக்கு முதன்முதலில் அறிவித்தவர் அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆவார்.

ஜெர்மனியின் 'வுட்டெம்பெர்க்' 'கில் அல்ம்' என்ற ஊரில் பாலின் ஹெர்மன் ஐன்ஸ்டீன் என்னும் தம்பதியரின் மகனாக 14-03-1879ல் பிறந்தார்.

ஜூரிச் நகரிலுள்ள 'ஃபெடரல் இன்ஸடிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யின் மாணவனாகப் பட்டம் பெற்றார் (1901). ஜூரிச் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் (1906).

வயதில் நான்கு வருடங்கள் மூத்தவரான 'மிஸிவா மாரிட்ச்' என்பவரைத் திருமணம் செய்தார் (1903). இவரை விவாகரத்து செய்த பின் 'எல்சா' என்னும் மாதை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார் (1919).

'பெர்ன்'னிலுள்ள காப்புரிமை பதிவு அலுவலகத்தில் தொழில் நுணுக்க உதவியாளராகப் பணியாற்றினார் (1902).

'தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி' மற்றும் 'போட்டோ எலெக்ட்ரிக் தியரி' என்பவைகளைப் பற்றி இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பதிப்பித்து வெளியிட்டார் (1905).

இதன் தேற்றம் தான் E=Mc2 என்பதாகும். ( E என்பது சக்தி m அடர்த்தி மற்றும் c ஒளிவேகம் என்பதைக் குறிக்கின்றன). இது உலகம் முழுதும் அறிவியலாளர்களினால் சிலாகித்துப் பேசப்படும் தேற்றம் ஆகும். சக்தி, அடர்த்தி மற்றும் ஒளிவேகத்துக்கு இடையிலான கருத்து ஒற்றுமைகளைக் கொண்ட அடிப்படை ஆகும்.

'பெர்ன்' பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் (1908)

ஜூரிச் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியராக ஆக்கப்பட்டார் (1909)

'பிரேக்' நகரத்திலுள்ள கார்ல் ஃபெர்டிணான்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ஆனார் (1911)

ஜூரிச்சிலுள்ள தான் பயின்ற 'ஃபெடரேடட் இன்ஸடிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யின் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார் (1912)

பெர்லின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார் (1914).

'தி மினீங் ஆஃப் ரிலேட்டிவிட்டி' என்ற நூலை எழுதி வெளியிட்டார் (1923)

'நியூ ஜெர்ஸி' நகரிலுள்ள 'இன்ஸ்டிடியூட் ஃபார் அட்வான்ஸ் ஸ்டடி'யில் 'பிரின்ஸடன்' என்னுமிடத்தில் அமைந்த நிறிவனத்துக் பேராசிரியர் நியமனம் ஐன்ஸ்டீனுக்குக் கிடைத்தது (1932).

ஜெர்மனியில் நடந்த நாஜி அரசாட்சியில் தன் சொத்துக்கள், அலுவலகம் மற்றும் குடியுரிமை முதலியவைகளை ஆல்பர்ட் ஐன்ஸடீன் துறக்க நேரிட்டது (1933). அரசே இவைகளை அபகரித்துக் கொண்டது. இந்தப் பாதிப்புகளின் துக்கங்களை மட்டும் சுமந்து கொண்டு ஜெர்மனியிலிருந்து வெளியேறினார்.

ஆக்ஸஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஹெர்பர்ட் ஸபென்ஸர் விரிவுரையாளராக நியமனம் பெற்றார் (1933).

'எவல்யூஷன் ஆஃப் பிஸிக்ஸ்ஸ்' என்ற நூலை எழுதி வெளியிட்டார் (1938)

இஸரேல் நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க மறுத்து விட்டார் (1952). இது இஸரேல் அரசின் கோரிக்கை.

'ராயல் பிரஸஸியன் அகாடமி ஆஃப் சயின்ஸ்' என்ற அமைப்பின் அங்கத்தினர் ஆனார். 'தி நியூ கெய்ஸர் வில்ஹம் இன்ஸடிடியூட்'டின் இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

'தி வொர்ல்டு அஸ் ஐ சீ இட்' என்ற தனது நூலை வெளியிட்டார் (1953).

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஐம்பதாம் பிறந்த நாளை மிகப் பெரிய அளவில் விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டதைத் தவிர்க்க வேண்டி பெர்லினிலிருந்து கட்டாயமாக வெளியேறினார்.

'புரோட்டான்' மற்றும் 'குவாண்டம் தியரி'க்கென இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது (1922). 'டெல் அலிவ்' நகர முதல் கெளரவக் குடிமகன் என்ற அந்தஸ்தைப் பெற்றார் (1923). கோப்லே பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது (1925). லண்டனிலுள்ள 'ராயல் அஸ்ட்ரானாமிக்கல் சொசைட்டி' இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கிக் கெளரவித்தது (1926).

லண்டனிலுள்ள 'ராயல் சொசைட்டி' மற்றும் பாரிஸிலுள்ள ஃபிரெஞ்ச் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஃபெல்லோஷிப்புகள் ஐன்ஸ்டீனுக்குக் கிடைத்தன.

உலகின் பல பாகங்களில் இயங்கி வந்த பல்கலைக்கழகங்கள் கெளரவ டாக்டரேட் பட்டங்களை இவருக்கு வழங்கிக் கெளரவித்துள்ளன. பிலடெல்பியாவிலுள்ள ஃபிராங்கிளின் இன்ஸ்டிடியூட் இவருக்குப் பதக்கம் வழங்கியது.

ஜெர்மனியில் பிறந்து இஸ்ரேல், பெர்லின் ஆகிய நாடுகளில் வாழ்ந்து பின் அமெரிக்காவில் குடிபுகுந்தவர் ஐன்ஸ்டீன்.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநிலத்திலுள்ள 'பிரின்செட்டன்' என்னுமிடத்தில் 18-04-1955ல் இயற்கை எய்தினார். மரணத்தின் போது இவரின் வயது எழுபத்தாறு.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment