Saturday 9 February 2013

17. மார்சீஸ் கக்லி எல்மோ மார்கோனி (1874-1937)


பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொலைத் தொடர்புத்துறையில் நிகழ்ந்துள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் கணிணிகளின் செயல்பாடுகள் பற்றி எல்லோரும் அறிவோம்.

டிரங்க்கால்,கேபிள் மூலம் கடல் கடந்த நாடுகளுடன் தொடர்பு, செல்போன், ஈமெயில்,பேஜர் என்பவைகள் பிரமிக்க வைத்துள்ளன. மேலும் விண்வெளிக் கலங்கள் மூலம் சில நிமிடங்களில் உலகின் இரண்டு, இடுக்குகளுக்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலைகள் உருவாகிவிட்டன.

நூறு ஆண்டுகளுக்கு முன், இவைகளுக்கு முன் மாதிரியான அறிவியல் கண்டுபிடிப்பை வழங்கிய அறிவியலார் மார்சீஸ் கக்லி எல்மோ மார்கோனி என்பவரை அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

இவர் இத்தாலியிலுள்ள 'போலோக்னா' என்னும் நகரில் 25-4-1874ல் அனி ஜமேசன்- ஜியு செப்பி மார்கோனி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

முதலில் 'போலோக்னா'விலும், பின்னர் ஃப்ளாரன்ஸிலும் கல்வி கற்றார். 'லெக்ஹார்ன்' என்னுமிடத்திலுள்ள டெக்னிக்கல் ஸ்கூலில் சேர்ந்து இயற்பியலைக் கற்றார். அப்போது 'எலெக்ட்ரோ மாக்னெடிக் வேவ்' பற்றிய நுணுக்கங்களைப் பரிசோதனைகள் செய்யும் போது தெரிந்து கொள்ளும் வாய்ப்பு மார்கோனிக்குக் கிட்டியது.

'பியூட்ரைஸ் ஒ பிரைன்' என்பவரை முதலில் திருமணம் செய்தார் (1905). இவரை விவாகரத்து செய்து விட்டு 'கன்டெஸா மரியா கிரிஸ்டினா பெஸ்ஸிஸ்காலி' என்னும் மங்கையை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார் (1927).

செய்தி பரப்பும் மற்றும் பெறும் கம்பியில்லாத் தந்தி சாதனத்தை உருவாக்கினார். முதலில், மணியடித்து சங்கேதக் குறிகளை இச்சாதனத்தின் மூலம் பன்னிரெண்டு அடி தூரம் வரைதான் அனுப்பினார் (1894).

'மேக்ஸ்வெல், ஹெர்ட்ஷ் மற்றும் பல அறிவியலார்கள் செய்து முடித்த ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் கொண்டு மேலும் ஆராய்ச்சிகளை நடத்தினார் மார்கோனி (1896). ஒன்பது மைல் தூரம் தான், அப்போதும் செய்திகளை இவரால் அனுப்ப முடிந்த்தாம்.

மார்கோனி வடிவமைத்த சாதனங்களை விலைக்கு வாங்கிய சில செல்வந்தர்கள் ஒரு லட்சம் பவுன்களை முதலீடு செய்து 'வயர்லெஸ் டெலிகிராப் அண்ட் சிக்னல் கம்பெனி லிமிடெட்'டைத் துவக்கினார்கள் (1897). இதுவே முதல் வயர்லெஸ் கம்பெனியாகும்.

இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து ரேடியோ மெசேஜ்கள் அனுப்பப்பட்டன (1899).

முதல் வயர்லெஸ் கம்பெனியின் பெயர் 'மார்கோனி வயர்லெஸ் டெலிகிராப் கம்பெனி' என மாற்றம் செய்யப்பட்டது (1900).\

அட்லாண்டிக் மகா சமுத்திரத்தைக் கடந்து ரேடியோ செய்திகளை அனுப்ப முயன்றனர் (1901).

முதல் ரேடியோ செய்தி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அனுப்பப்பட்டது (1918).

ஆஸ்திரியா மற்றும் பல்கேரியா நாடுகளுக்கு இடையில் சமாதான ஒப்பந்தம் பாரிஸ் நகரில் சமாதான மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. பூரண அதிகாரம் பெற்ற அரசு தூதரக அந்தஸ்தில் மார்கோனி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார் (1919).

இத்தாலிய செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மார்கோனி (1929).

ஃபாலிஸ்ட் கிராண்ட் கவுன்சிலின் அங்கத்தினர் ஆனார் (1930), நிறைய விருதுகள்,பரிசுகள்,கெளரவப் பட்டங்களும் பெற்ற பெருமை இவருக்கு உண்டு.

ரோம் நகரில், தன் அறுபத்து மூன்றாம் வயதில் 20-07-1937 அன்று சாதனையாளர் மார்சீஸ் கக்லி எல்மோ மார்கோனி மரணம் அடைந்தார்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment