Tuesday 17 January 2012

குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்



உயர்கல்வி, மற்றவர்களோடு பழகிப் பெற்ற அனுபவம் , சாதுரியம் இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் . அதாவது இவைகளை எண்ணிப் பாருங்கள்.

பொறியாளராக , மருத்துவராக, பேராசிரியராக , வழக்குரைஞராக ஆக வேண்டுமென்ற குறிக்கோளையும் வரித்துக் கொள்ளுங்கள் .

நிச்சயம் நீங்கள் விரும்பியவாறே ஆவீர்கள்.

எதையுமே எண்ணாமல், குறிக்கோளும் இல்லாது புறப்படுகிறவன் எதையுமே கண்டடைவதில்லை .

இன்ன ஊருக்கு போக வேண்டும் என் நிச்சயம் செய்யும் ஒருவன் , ரயிலடிக்குச் சென்று, பயணச்சீட்டு பெற்றால் தான் , நினைத்த ஊருக்கு போக முடியும் . இதுதான் நியதி .

வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கு எது என்பதை சரியாக கணிக்க முடியாது தவிக்கும் இளைஞர்கள் ஏராளம்.

காரணம் சலனம் தான் . அப்பா இருக்கிறார் நமக்கு . அவரது வழிகாட்டுதலில் நமக்கு நல்ல கல்வி கிடைக்கும் . இவ்வித நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ளும் சிலர் ;

தொழில் கல்விக்கு கேட்கப்படும் பணத்தை அள்ளிவிட்டால் நமக்கு விருப்பமான பிரிவு கிடைக்கும் . அப்பா பணத்தைச் செலவு செய்ய தயங்க மாட்டார் என்றும் சிலர் ;

இரண்டும் நல்லவிதமாக அமைந்து விடும் என்று சொல்லிவிட முடியாது .
நம் குடும்பத்தில் நீ டாக்டராக வேண்டும் என்று வழிகாட்டும் அப்பாவின் எண்ணம்  மகனின் விருப்பத்துக்கு மாறாக இருந்தால் ;

தொழிற்கல்வி கற்பிக்கும், கல்லூரி கேட்கும் பணம் கொடுக்க இயலாது போனால் அல்லது தேவைப்படும் பணம் சேகரிக்குமுன் இடம் நிரம்பிவிட்டால் ;

இரண்டும் வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன .

வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ள லட்சியங்கள் அல்லது குறிக்கோள்கள் அவசியம் தேவை . முதலில் இவைகளை தீர்மானம் செய்து கொண்டு அதை நோக்கி அடியெடுத்து வையுங்கள் .

வழியில் தென்படும் தடைகளைத் தன் அறிவுத் திறன் கொண்டு நீக்குங்கள் . பெரியவர்களின் ஆலோசனைகள் இவ்விஷயத்தில் கை கொடுத்துதவும்.

குறிக்கோளில் மனம் ஒன்றிப் போகிறவர்களுக்கு களைப்பே தெரியாது . ஆகவே வாழ்க்கையில் இலகுவாக வெற்றி பெறுவது நிச்சயம் .

குறிக்கோளுடன் செயல்படுவோம் . வெற்றி பெறுவோம் .


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment