Saturday, 18 May 2013

31. சாக்ரடீஸ் ( கி,மு 470 - கி,மு 399)

உலகளாவிய தத்துவ மேதைகளில் சிறந்தவர் எனப் பேசப்படுபவர் கிரேக்க தேசத்தின் சாக்ரடீஸ் ஆவார். கிரீஸிலுள்ள ஏதென்ஸ் நகரில் பேநாராட்டி , சாப்ரோநிஸ்கஸ் தம்பதியருக்கு கி.மு.470ல் பிறந்தார். ஏதென்ஸில் வாழ்ந்த தத்துவ மேதையான 'அனாக்ஸா கோரஸ்' என்பவரின் சீடர் ஆனார் சாக்ரடீஸ்.

'மைர்டோன்' என்னும் மங்கையை முதலாவதாகத் திருமணம் செய்து கொண்டார். பின் 'ஸான்திப்பி' என்பவரை இரண்டாவது மனைவியாக மணம் செய்து கொண்டார்.

கி.மு.480ல் ஏதென்ஸ் ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் பல முக்கியப் பொறுப்புகளையும், பதவிகளையும் வகித்த பெருமைக்கு உரியவர் சாக்ரடீஸ். கட்டணம் ஏதும் பெறாமலேயே தத்துவ இயலை விரும்பியவருக்குக் கற்பித்தார்.

தன் எண்ணங்களுக்கும், கொள்கைகளுக்கும் இசைவாக நடக்க மறுத்த நிர்வாகத்தினர் மற்றும் சகாக்களுடன் சண்டையிட்டார். இவரது இச்செய்கைகளால் எல்லோரது கோபங்களுக்கும் ஆளானார்.

தன் தத்துவார்த்த எண்ணங்களையும், கொள்கைகளையும், கருத்துக்களாகப் பதிவு செய்து வைக்கவில்லை. நூல்களின் மூலமாக செய்திருக்கலாம். ஆனாலும் மிகப் பெருமை வாய்ந்த தத்துவவாதியென பழங்கால உலகத்தின் சிந்த்னையாளர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டவர். 

வீட்டில் தங்குவது இல்லை. நிறையப் பொழுதுகளை வெளியில் தான் கழித்து வந்தார். செருப்பு அணிவதில்லை. உடம்பில் ஒரே அங்கியை மட்டும் அணிந்து எல்ல இடங்களௌக்கும் சென்று வருவார். மழை,வெயில் இரண்டையும் பொருட்படுத்த மாட்டார். மிக எளிமையாக வாழ்ந்தவர் என்ற பெயர் பெற்றவர் சாக்ரடீஸ.

இவரது தத்துவார்த்தங்களும், கொள்கைகளும் இவரது நாற்பது வயதுக்கு முன்பே தைரியமாகக் கூறப்பட்டவை ஆகும். இவைகள் ஏதென்ஸுக்கும் வெளியே வாழ்ந்த மிகப்பெரிய அறிவு ஜீவிகளின் மத்தியில் பரவின.

சாக்ரடீஸின் மீத்து ஆட்சியாளர்கள் சுமத்திய குற்றங்களில் முதன்மையானது - ஏதென்ஸ் நாட்டு இளைஞர்களைச் சீரழித்தது; பின் ஜனநாயகத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு மகக்ளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது; அரசுக்குக் கீழ்படியாமல் உதாசீனப் போக்குகளைக் கடைப்பிடித்தது; கடவுள்களை மதிக்காமல் நடந்து கொண்டது; இவ்வாறு பல குற்றங்கலையும் சுமத்து கைது செய்தனர்.

வழக்கு நடந்தது. ஏதென்ஸ் அரசு இவருக்கு மரண தண்டன்பை வழங்கியது. இவரை வற்புறுத்தி அரசுக்கு கீழ்படிந்தால் மரண தண்டனையை ரத்து செய்து விடுகிறோம் எனக் கூறியது அரசு. மரண தண்டனையையும் ஒரு மாதம் தள்ளி வைத்தனர். தன் லட்சியம் மற்றும் கொள்கைப் பிடிப்பில் இறுதிவரை தளர்ச்சிச காட்டவில்லை. ஏதென்ஸ் அரசின் நிபந்தனைகளை ஏற்க மறுத்து விட்டார்.

சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ . உலக அலவில் குருவின் கொள்கைகளைப் பரப்பியவர். அரசியல் சூழ்ச்சிகளை சாக்ரடீஸின் வழக்கு நடக்கும் போதே அறிந்து கொண்டவர் பிளாட்டோ. இவர் எழுதி வைத்த குறிப்புகளிலிருந்து தான் வழக்கு மன்றத்தில் சாக்ரடீஸின் தன்னிலை விளக்கம் முழுமையாகக் கிடைத்துள்ளன என்பது வரலாற்று உண்மையாகும்.

சிறையில் சாக்ரடீஸுக்கு 'ஹெம்லாக்' என்னும் விஷத்தை கோப்பையில் ஊற்றிப் பருகவைத்து மரண தண்டனையை நிறைவேற்றியது அரசு.

கொண்ட கொள்கைகளுக்காகவும், தத்துவ போதிப்புக்காகவும், லட்சியத்தோடு மரணத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டவர் சாக்ரடீஸ்.

இப்பகுத்தறிவுப் பகலவன் உயிர்நீக்கும் போது எழுபத்து ஒன்று வயது நிறைந்திருந்ததாம் (கி.மு.399)

 
 குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment