Saturday, 11 May 2013

30. குங்ஃபூசே ( கி.மு.551 - கி.மு.479)

தத்துவம்  மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய பிரிவுகளில் உலகின் சிறந்த மூத்த தத்துவவாதியாகக் கருதப்படுபவர் குங்ஃபூசே என்ற கன்பூசியஸ் ஆவார்.

உலகப் புகழ் வாய்ந்த சீன தத்துவஞானியான குங்ஃபூசே சீனாவின் லூயூ மாநிலத்தின் 'டிசோ' கிராமத்தில் சிங்சாய், சூக்லியாங்ஹே தம்பதியருக்கு கி.மு.551ல் பிறந்தவர்.

ஏழு வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளியில் பல்வேறு பாடங்களையும் கற்றுக் கொண்டார். பண நெருக்கடியால் இவர் பதினான்கு வயதில் பள்ளியிலிருந்து வெளியேறினார். ஆசிரியரிடம் தனியாக வரலாறு மற்றும் தத்துவ இயலைப் படித்து முடித்தார்.

கன்பூசியஸுக்கு இசையில் மிகுந்த் நாட்டம் உண்டு.

புல்லாங்குழல் வாசிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.

வில் வித்தையில் கைதேர்ந்தவர். வில் அம்புகளைத் தானே தயாரித்துக் கொண்டார்.

சிறந்த வில்லாளி என்னும் சிறப்பைப் பெற்றவர் குங்ஃபூசே என்ற கன்பூசியஸ்.

இருமுறை திருமணம் செய்து கொண்டார். நிர்வாகத்தின் கொள்கைகள், ஒழுக்கம் நிறைந்த வாழ்வியல் முறைகளைக் கற்றுத் தரும் பள்ளி ஒன்றை நிறுவினார்.

அப்பள்ளியில் ஆசிரியராகவும் இருந்து மாணவர்களுக்குப் போதனைகள் செய்தார்.

'லூயூ' மாநிலத்தின் மாஜிஸரேட்டாகத் தன் ஐம்பதாவது வயதில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் சீன மொழியில் எழுதிய ' ச்சுன் - ச்சூ', 'லீச்-சிங்', 'ஈச்-சிங்', ஷீஹச்சிங் - ஷீசிங்' என்னும் நான்கு நூல்களும் உலகப் பிரசித்தி பெற்றவைகள் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

இவரது வாழ்க்கையைப் பற்றிய விவரமான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை என்பது ஆய்வாளர்களின் ஆதங்கமாகும்.

ஆனாலும் இவரது தத்துவப் பொழிவுகள் உலகெங்கும் பரவியதால் தலைசிறந்த தத்துவ ஞானியாகப் போற்றப்படுகிறார்.

சீனாவின் 'லூ' நகரில் கி.மு.479ல் மரணம் அடைந்தார். மரணத்தின் போது இவரது வயது எழுபத்து இரண்டாகும்.


குரு ராதாகிருஷ்ணன்


No comments:

Post a Comment