நீராவியின்
உதவியால் ஒடும் ரயில் என்ஜினைக் கண்டிபிடித்தவர் அறிவியலாளர் ஸ்டீபன்சன்.
இவர் இங்கிலாந்திலுள்ள
'வைலம்' என்னும் ஊரில் 9-6-1781ல் பிறந்தார். தந்தை பெயர் ராபர்ட் ஸ்டீபன்சன்.
வறுமையின்
காரணமாக இளவயதில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க இயலவில்லை. இரவுப் பள்ளிக்குச் சென்று
படித்தார்.
பொறியியல்
பற்றிய அறிவு இவருக்கு இளைமையிலேயே தன் வசமானது. இவரது லட்சிய நோக்கமும், கடின உழைப்புமே
அரிய சாதனைகளைச் செய்து முடிக்க உதவின.
'ஃபிரான்ஸிஸ்
ஹெண்டர்சன்' என்னும் மங்கையை முதல் மனைவியாக மணந்தார் (1802)
'எலிஸபெத்
ஹிண்ட்மார்ஸ்' என்பவரை இரண்டாவதாகத் திருமணம் புரிந்தார் (1820)
சிறுவனாக
இருந்த போது விவசாயி ஒருவரின் மாடுகளை மேய்க்கும் பணியின் மூலம் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்
இவர்.
பதினான்காம்
வயதில் தந்தைக்குப் பணியில் உதவிகள் செய்தார் (1795). இளைஞனான ஸ்டீபன்ஸன் சுரங்கங்களில்
பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தார்.
இவ்வகை
அனுபவங்கள் இவருக்கு 'வாட்டர் ரோவ்' என்னுமிடத்தில் 'இஞ்சின்மேன்' பதவியை ஏற்க வைத்தது
(1798)
முதன்மைக்
கண்காணிப்பாளர் பதவி உயர்வு கிடைத்தது.
நீராவியால்
இயங்கும் என்ஜின் பற்றியே தீவிரமாகச் சிந்தித்தார்.
மேலும்
பல நிலக்கரி சுரங்கங்களில் கண்காணிப்புப் பொறியாளர் பதவிகளையும் வகித்தார்.
'புளூச்சர்' என்னும் பெயரிடப்பட்ட ரயில் என்ஜினை உருவாக்கி வெள்ளோட்டம் விட்டார் (1814). இது இவரின் முதல் முயற்சி என்று சொல்லப்படுகிறது.
சுரங்கங்களில்
பயன்படுத்தும் பாதுகாப்புச் சாதனமான 'ஜியோர்டி லாம்ப்' இவரது கண்டுபிடிப்பு தான்.
இக்கண்டுபிடிப்பு இவருக்குப் பேரும் புகழும் கொண்டு வந்து குவித்தது.
'டாலிங்டன்'
என்னும் ஊரிலிருந்து 'ஸ்டாக்டன்' என்ற ஊர் வரை, மணிக்கு இருபத்து நான்கு கிலோமீட்டர்
வேகத்தில், கிட்டத்தட்ட நானூற்று ஐம்பது பேர்களுடன் ரயில் என்ஜின் இணைக்கப்பட்ட ரயில்
பெட்டிகளுடன் ஒரு வண்டித் தொடர் சென்றது. ரயில் என்ஜின் ஒட்டிச் சென்றவர் ஸ்டீபன்ஸன்
(1825). இவரது முதல் சாதனை இது.
பின்னர்
'ராக்கெட்' என்னும் பெயருடன் ரயில் என் ஜின்களைத் தொடர்ந்து உருவாக்கினார்
(1829). 'பிளானெட்' ரயில் என் ஜின்களையும், 'சாம்சன்லோகோ மோடிவ்ஸ' என்னும் பெயருடன்
ரயில் என் ஜின்களையும் உருவாக்கினார் (1830).
தன் மகனை பொறியியல் கல்வி கற்கச் செய்து, பொறியாளர் பட்டம் பெற்றதும், தம்முடன் இணைத்துக்
கொண்டார். அப்பாவும், மகனுமாக நாட்டின் பல முக்கிய ரயில்வே திட்டங்களை வெற்றிகரமாகச்
செய்து முடித்தனர்.
இதன் மூலமாக
அளவற்ற செல்வங்களும், புகழ் மற்றும் செல்வாக்குகளையும் இவரால் பெற முடிந்தது.
உழைப்பால்
உயர்ந்த ஸ்டீபன்ஸன் படடங்கள், பரிசுகள் பெறுவதில் மனம் ஒப்பவில்லை. வறுமையில் வாடும்
போது, பல பணிகளில் கஷ்டப்படும் போது பெறாத பட்டங்களையும், பரிசுகளையும் வாழ்வின்
இறுதி நாட்களில் பெறுவதற்கு மறுத்து விட்டார்.
பிரிட்டிஷ் அரசு இவருக்கு வழங்கிய 'நைட்ஹீட்' என்னும் கெளரவப் பட்டத்தை ஏற்க் மறுத்துவிட்டார்.
மிகப்
பெரிய சாதனையைப் புரிந்த ஸ்டீபன்ஸன் இங்கிலாந்தின் 'செஸடர்ஃபீல்டு' என்னும் நகரில் அன்று மரணமடைந்தார். அறுபத்து ஏழு வருடங்கள் வாழ்ந்து சமுதாயத்துக்கு உதவிகள்
பல செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆகிறார்.
குரு ராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment