Wednesday 15 August 2012

சரி செய்து கொள்ளுங்கள்


அறிகுறிகளை அறிவித்துக் கொண்டு தான் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. கூர்மதியினால் அவைகளைத் தெரிந்து கொண்டவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்று முன்பே அறியும் ஆற்றல் ஏற்படும்.

சிலர் எல்லாமே நம் வினைப்படிதான் நடக்கும். தடுக்க யாராலும் முடியாது. நம் விதியின் பயனே என்றவாறே இருந்து விடுவர்.

இவர்களை 'சோற்றால் அடித்த பிண்டம்' என்று தான் அழைக்க வேண்டும். இவரைப் போன்றவர்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் உதவ இயலாதவர்கள் என்று ஒதுக்கி விடுவர்.

ஒரு செயல் நல்லதோ, கெட்டதோ, பயன்பாட்டின் போது நல்லவைகளுக்கு அறுகுறிகளிலும் கெட்டவைகளுக்கு தடயங்களும் கிடைப்பது தான் நியதி.

நற்செயல்களின் கர்த்தாக்களுக்கு அறிகுறிகளின் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கொடுஞ்செயல் புரிபவர்களை கைது செய்ய தடயங்கள் உதவியதாகக் காவல்துறையினர் வாக்குமூலங்களின் வாயிலாகத் தெரிய வருகின்றன.

இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. அறிந்தால் வேறு விதமாகச் செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கலாமே என எண்ணுவது சிலரின் வழக்கம்.

சுயசிந்தனை அற்றவர்கள் தான் இவ்வாறு நினைக்கின்றனர்.

தன் அறிவுக்கு வேலை தந்திருப்பார் எனில் இவ்வாறு எண்ணுவதை விலக்குவார்கள். நிகழ்வுகளும் வேறு விதமாக நடந்திருக்கும்.

இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்வியல். இரண்டையும் ஏற்றுக் கொண்டு சரி செய்து கொண்டால் நாம் வளம் பெற முடியும்.
சுயசிந்தனை, அறிவாற்றல், ஈடுபாடு, தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் வெற்றி நடை போடுவார்கள்.

நடப்பதை யார் தடுக்க இயலும். எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்று வேதாந்தம் பேசி, நத்தைபோல் சுருங்கி முடங்கிப் போகிறவர்கள் தோல்விகளையே கேட்டுப் பெறுபவர்கள் ஆவர்.

வாழ்க்கையைச் சரி செய்து கொண்டு செல்ல முயலுங்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment