Wednesday 26 October 2011

மன அமைதி வேண்டுமா ...


மன அமைதியை வேண்டாம் என்று கூறுபவர்களை யாரும் பார்த்ததில்லை .

மன அமைதியைத் தேடி மலைச் சாரல்களுக்கும் , நதி தீரங்களுக்கும் போக வேண்டாம் . நாம் இருக்கும் இடத்திலேயே அதைப் பெற முடியும்.
பிரச்சினைகள் தோன்றாத இடம் இல்லை . அலுவலகம் , வீடு , தொழிற்சாலை, பள்ளிக்கூடம், ஆலயங்கள் எல்லா இடங்களும் அதற்குத் தாராளமாக இடங்கள் உண்டு .

பிரச்சினைகளை அணுகி எதிர் கொள்வதில் நிறைய வேறுபாடுகள் உண்டு . விளைவுகள் பூதாகரமாக எழும் போது தான் அதன் தீவிரம் உணரப்படுகிறது .
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது முதுமொழி . தீமையும் நன்மையும் பிறர் நமக்குத் தருவதில்லை . இரண்டுக்கும் முழு முதற் காரணம் நாமே என்பதை உணர்ந்து கொள்ளல் அவசியம்

வீடுகளில் பிச்சை எடுத்து உண்டு , பாதையோரங்களில் படுத்துறங்கும் ஒருவனுடைய நிலை
ஏராளமான பணம் , வசதியான வாழ்க்கை எல்லாம் செய்து தரும் ஏவலர்கள் என சகல வசதிகளைக் கொண்ட செல்வந்தரின் நிலை
இவ்விருவருக்கும் மனநிலைகள் வேறுபாடுகள் கொண்டவைகளாகத் தான் இருக்கும்
எந்தச் பிரச்சினையையும் அமைதியாக அணுகுதல் தான் முறை . அரக்கப்பரக்க காரியங்களைச் செய்து விட்டுப் பின் விளைவுகள் விசுவரூபம் எடுக்கும் போது மன அமைதி இல்லை
குட்டக்குட்ட குனிபவனும் நிமிர்ந்து நிற்பான் என்பதை நம்மில் பலர் மறந்து போகிறோம் .
கற்பனைகளை வளர்த்துக் கொண்டு நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களில் தன்னை நுழைத்துக் கொள்பவர்கள் உண்டு . கற்பனைகள் மாறாதது என்று கூற முடியாது. மாற்றங்களினால் தோல்வி கண்டதும் துவண்டு போவதுண்டு . இவர்களுக்கு மன அமைதி கிடைப்பது அரிது
எடுத்துக் கொண்ட காரியத்தை முடிக்க நம்மால் இயலும் என்று யோசனை செய்ய வேண்டும் . முடியாது என்று முடிவுக்கு வந்து விட்டு விடுவது சாலச் சிறந்தது
பிறர் நம்மை மெச்ச வேண்டும் என்ற மாயையால் முடியாத காரியத்தில் நுழைவது சரியல்ல . மன அமைதி இல்லாதவர்களுக்கு இதய நோய் , இரத்தக் கொதிப்பு , சர்க்கரை முதலிய நோய்கள் இணைபிரியாத தோழர்களாக இறுதி வரை உடலை வாட்டும்.
எந்த ஒரு காரியத்தையும் அல்லது பிரச்சினைகளையும் அணுகும் போது நன்றாக ஒரு தடவைக்கும் மேலாக யோசித்துச் செயல்பட வேண்டும் . யோசனை செய்பவர்கள் நிச்சயம் திட்டமிடுபவர்களாகத் திகழ்வார்கள்.
இவர்களிடம் மன அமைதி எப்போதும் நிறைந்து காணும் .

குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment